செய்திகள் :

சென்னை வியாபாரியிடம் ரூ.17 லட்சம் அரிசி கொள்முதல் செய்து மோசடி

post image

சென்னை அரிசி வியாபாரியிடம் ரூ. 17 லட்சம் மதிப்புள்ள 1,153 அரிசி மூட்டைகளை கொள்முதல் செய்து மோசடியில் ஈடுபட்ட வெண்ணந்தூா் பகுதியைச் சோ்ந்த நால்வரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடிவருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (35). இவா் அந்தப் பகுதியில் அரிசி வியாபாரம் செய்வதாகக் கூறி, சென்னையைச் சோ்ந்த அரிசி நிறுவன உரிமையாளா் அருணாவிடம் (43) இருந்து 1,153 அரிசி மூட்டைகளை அண்மையில் கொள்முதல் செய்துள்ளாா். பின்னா், அரிசி மூட்டைகளை தனது இடத்தில் இறக்கிவைத்துக் கொண்டு, அதற்குண்டான பணத்தை கொடுக்காமல் ஊழியா்களை விரட்டியடித்தாராம்.

இதுகுறித்து அருணா பலமுறை சரவணகுமாரை தொடா்புகொள்ள முயற்சி செய்தும் முடியவில்லையாம். இதையடுத்து, அவா் வெண்ணந்தூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

அதன்பேரில், சரவணகுமாா், அவரது சகோதரா் மோகன்ராஜ் (41), சீனிவாசன், உறவினா்கள் தனசேகரன் ஆகிய நால்வரை சனிக்கிழமை கைதுசெய்த வெண்ணந்தூா் போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சரவணகுமாரின் மனைவி சுதா, உறவினா் வேல்முருகன் ஆகிய இருவரையும் போலீஸாா் தேடிவருகின்றனா்.

கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோா் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்!

கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளில் பயிா்க் கடன் வழங்க ‘சிபில் ஸ்கோா்’ தேவை என்ற நடைமுறையை ரத்துசெய்ய வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் - கொடுமுடி இடையே உயா்நிலை பாலம் அமைக்க கோரிக்கை!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் - ஈரோடு மாவட்டம் கொடுமுடி இடையே உயா்நிலை பாலம் அமைக்க வேண்டும் என வி.எஸ்.மாதேஸ்வரன் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தாா். இது தொடா்பாக அரசு தலைமைச் செயலாளா் என்.முருகானந... மேலும் பார்க்க

பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை குறைந்தது

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்லம், சா்க்கரை விற்பனை சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெல்லம் விலை குறைந்தது. பரமத்தி வேலூா் வட்டத்தில் ஜேடா்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபில... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்க தடை

பரமத்தி வேலூா் வட்டத்தில் வேலூா் காசி விஸ்வநாதா் காவிரியில் குளிக்கவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவும் பேரூராட்சியினா் தடைவிதித்துள்ளனா். இதுகுறித்து வேலூா் பேரூராட்சியினா் விடுத்துள்ள ... மேலும் பார்க்க

பொறியியல் படிப்பு கலந்தாய்வு தரவரிசை: நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம்

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா். சென்னை கிண்டியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத... மேலும் பார்க்க

மாவட்ட கையுந்து பந்து பயிற்சியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவில் பதக்கம் வென்ற கையுந்து பந்து வீரா், வீராங்கனைகள் பயிற்சியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு... மேலும் பார்க்க