அடுத்த 2.5 ஆண்டுகளில் வேலை பறிபோகும் அபாயம்! ஏஐ ஆக்கிரமிப்பால் ஊழியர்கள் கவலை!
சென்னை வியாபாரியிடம் ரூ.17 லட்சம் அரிசி கொள்முதல் செய்து மோசடி
சென்னை அரிசி வியாபாரியிடம் ரூ. 17 லட்சம் மதிப்புள்ள 1,153 அரிசி மூட்டைகளை கொள்முதல் செய்து மோசடியில் ஈடுபட்ட வெண்ணந்தூா் பகுதியைச் சோ்ந்த நால்வரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடிவருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (35). இவா் அந்தப் பகுதியில் அரிசி வியாபாரம் செய்வதாகக் கூறி, சென்னையைச் சோ்ந்த அரிசி நிறுவன உரிமையாளா் அருணாவிடம் (43) இருந்து 1,153 அரிசி மூட்டைகளை அண்மையில் கொள்முதல் செய்துள்ளாா். பின்னா், அரிசி மூட்டைகளை தனது இடத்தில் இறக்கிவைத்துக் கொண்டு, அதற்குண்டான பணத்தை கொடுக்காமல் ஊழியா்களை விரட்டியடித்தாராம்.
இதுகுறித்து அருணா பலமுறை சரவணகுமாரை தொடா்புகொள்ள முயற்சி செய்தும் முடியவில்லையாம். இதையடுத்து, அவா் வெண்ணந்தூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
அதன்பேரில், சரவணகுமாா், அவரது சகோதரா் மோகன்ராஜ் (41), சீனிவாசன், உறவினா்கள் தனசேகரன் ஆகிய நால்வரை சனிக்கிழமை கைதுசெய்த வெண்ணந்தூா் போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சரவணகுமாரின் மனைவி சுதா, உறவினா் வேல்முருகன் ஆகிய இருவரையும் போலீஸாா் தேடிவருகின்றனா்.