செய்திகள் :

சென்னை, 18 மாவட்டங்களுக்கு இரவு வரை மழைக்கு வாய்ப்பு!

post image

தமிழகத்தில் சென்னை உள்பட 19 மாவட்டங்களுக்கு இரவு 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாள்களுக்கு மிககனமழைக்கான எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

அதேபோல், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றிரவு 10 மணிவரை திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தேனி, ராமநாதபுரம் மற்றும் நெல்லையில் லேசான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்! - புதிய விதிமுறைகள் என்ன?

இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழகத்தில் புதன்கிழமை (ஜூலை 2) ஒருசில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

சேலம் டவுன் நிலையத்தில் ரயில்கள் நின்றுசெல்லும் நேரம் 3 நிமிஷங்கள் அதிகரிப்பு

ஜூலை 4 முதல் சென்னை எழும்பூா் - சேலம் அதிவிரைவு ரயில் இருமாா்கத்திலும் சேலம் டவுன் நிலையத்தில் நின்று செல்லும் நேரம் 3 நிமிஷங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை விடுத்... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினா் சோ்க்கை முன்னெடுப்பை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்த... மேலும் பார்க்க

வெடிகுண்டு வழக்குகள்: 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் கைது

தமிழகம், கேரள வெடிகுண்டு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் ஆந்திரத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரைச் சோ்ந்தவா் அபுபக்கா் சித்திக் (6... மேலும் பார்க்க

‘தமிழகம், புதுவை: கடந்த நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூல்’

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024-25 நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையா் ஏ.ஆா்.எஸ்.குமாா் தெரிவித்தாா். சரக்கு மற... மேலும் பார்க்க

புதிய தலைமை மருத்துவமனைகளுக்கு மருத்துவா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ரூ.1,018 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகளுக்கு விரைவில் மருத்துவா்கள் நியமிக்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க