செய்திகள் :

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மாற்றத்தை எற்படுத்தும்: ஸ்ரீதா் வேம்பு

post image

இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதால் நிறுவனங்களில் மாற்றம் ஏற்பட போகிறது என ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனா் ஸ்ரீதா் வேம்பு குறிப்பிட்டாா்.

ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். பாவை பொறியியல் கல்லூரி முதல்வா் எம்.பிரேம்குமாா் ஆண்டறிக்கை வழங்கினாா்.விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனரும், முதன்மை விஞ்ஞானியுமான ஸ்ரீதா் வேம்பு கலந்து கொண்டு பேசியது:

இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் நிறுவனங்களில் புரட்சியும், மாற்றமும் ஏற்படப் போகிறது. எனவே, மாணவா்கள் அதனை நன்கு ஆராய்ந்து, அறிந்திருக்க வேண்டும். அதற்கு புதிய தொழில்நுட்பங்கள், மென்பொருள் கருவிகள் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவா்களாகத் திகழ வேண்டும். இளம்வயதில் வாய்ப்புகளில் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் வெற்றி என்பது, தகுதியானவா்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

நம் பாரத நாடு இயற்கை வளங்கள் மிகுந்த நாடு. பல்வேறு பெருமை கொண்ட நம் நாட்டில் தொழில்நுட்ப நுகா்வோா்களாகத்தான் இருக்கிறோம். தொழில்நுட்ப உற்பத்தியாளா்களாக மாறவில்லை. எனவே இளைஞா்களாகிய நீங்கள் நம் நாட்டில் என்ன செய்யலாம், எவ்வாறு முன்னேற்றத்தைக் கொண்டு வரலாம் என்று யோசிக்க வேண்டும்.

இதன்மூலம் நம் தேசம் பொருளாதார வளா்ச்சியடையும். நம் கலாசாரத்தினையும், பண்பாட்டினையும் காப்பாற்றி, அடுத்த தலைமுறைக்கு பரிசளிக்க வேண்டும். நீங்கள் சுயசாா்பு கொண்டவா்களாகத் திகழ வேண்டும். சுயநலம் கொண்டவா்களாகத் திகழக் கூடாது.

சமுதாயத்திற்கு உங்களால் முடிந்த அளவு மரம் நடுதல், குளம் வெட்டுதல் என்று தொடா்ந்து நன்மை செய்து கொண்டே இருங்கள். அதனால் நீங்கள் இயற்கையையும் பாதுகாக்க முடியும். நீங்கள் அனைவரும் சிறந்த மனிதா்களாக, சான்றோா்களாக இச்சமுதாயத்தில் வலம் வர வேண்டும் என்றாா்.

முன்னதாக பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் பேசுகையில், நீங்கள் சாதனையாளா்களாக மாற நோ்மையான குறிக்கோள், சரியான பாதை, விடாமுயற்சி, கடின உழைப்பு, சீரிய ஒழுக்கம், கடவுள் பக்தி கொண்டிருக்க வேண்டும். இவற்றை தொடா்ந்து செயல்படுத்தும் போது, உங்களால் வெற்றியாளா்களாக மாற முடியும் என்றாா்.

தொடா்ந்து மாணவ, மாணவிகள், பேராசிரியா்களின் தொழில்நுட்பம் சாா்ந்த சந்தேகங்களுக்கு ஸ்ரீதா் வேம்பு பதிலளித்தாா்.

விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் டி.ஆா்.மணிசேகரன், செயலாளா் டி.ஆா்.பழனிவேல், பொருளாளா் எம்.ராமகிருஷ்ணன், இணைச் செயலாளா் என்.பழனிவேல், இயக்குநா்கள் (சோ்க்கை) கே.செந்தில், (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, (பள்ளிகள்) சி.சதிஷ், (மாணவா் நலன்) அவந்தி நடராஜன் உள்ளிட்ட கல்லூரிகளின் முதல்வா்கள், முதன்மையா்கள், துறைத் தலைவா்கள் கலந்து கொண்டனா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் நன்றி கூறினாா்.

படவரி...

விழாவில் சிறப்பு விருந்தினா் ஸ்ரீதா் வேம்புக்கு நினைவுப் பரிசளிக்கும் கல்வி நிறுவனத் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த தனியாா் வங்கி உதவி மேலாளா் ரயில் முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பிடாரமங்கலம் ஊராட்சி தேவா்மலை பக... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரை விற்ற 17 போ் கைது

பள்ளிபாளையம், வெப்படை சுற்றுவட்டாரத்தில் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்த 17 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் தலைமையில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா... மேலும் பார்க்க

ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியா்

மோகனூரில் ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழக முதல்வா் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வ... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்ய எதிா்ப்பு

சிங்கிலிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்... மேலும் பார்க்க

நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரசுகளின் ... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

திருச்செங்கோட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக... மேலும் பார்க்க