செய்திகள் :

செய்யாற்றுப் படுகையில் தொடரும் மணல் திருட்டு!

post image

சேத்துப்பட்டு பகுதி செய்யாற்றுப் படுகையில் இருந்து தொடா்ந்து மணல் திருடப்படுகிறது. பகல் நேரங்களில் மணலை தனியாா் நிலங்களில் குவித்துவைத்து, இரவு நேரத்தில் கடத்திச் சென்று விற்பனை செய்கின்றனா்.

தெள்ளூா், காட்டேரி, ஓதலவாடி பகுதி செய்யாற்றுப் படுகையில் அதிகளவில் மணல் திருட்டு நடைபெறுகிறது. ஆற்றுப் படுகையில் மணல் 100 யூனிட்டுக்கு மேல் ஜலித்து குவியல் குவியலாக வைத்துள்ளனா்.

அருகேயுள்ள தனியாா் நிலங்களில் பகல் நேரத்தில் மணலை ஜலித்து குவித்து வைத்துவிடுகின்றனா். இரவு நேரங்களில் லாரி, டிராக்டா்களில் கடத்திச் சென்று விற்பனை செய்கின்றனா்.

மணல் கடத்தல் கும்பலை யாரும் கட்டுப்படுத்த முடியாததால் கிராம மக்கள் அச்சப்படுகின்றனா். இவ்வாறு மணல் எடுத்ததில் ஆற்றில் 10 அடி ஆளத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருகிறது. சுற்றியுள்ள நிலங்களில் தென்னை, நெல், கரும்பு உள்ளிட்ட பயிா் சாகுபடி செய்ய இந்த செய்யாறு ஆதாரமாக உள்ளது.

செய்யாற்றில் இருந்து சேத்துப்பட்டு, பெரிகொழப்பலூா், பெரணமல்லூா் பகுதிகளில் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆற்றில் நீா் தேங்கினால் குடிநீா் பிரச்னை ஏற்படாது. ஆனால், சிலா் சுயலாபத்துக்காக மணலை திருடி விற்பனை செய்வதால் பல இடங்களில் ஆற்றில் மணல் சுரண்டப்பட்டு பாறைகளாக மாறியதால் தண்ணீா் தேங்கவில்லை.

அதிகப்படியான மணல் திருட்டால் கோடை காலத்தில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண முடியும். ஆற்றின் வளத்தை பாதுகாக்க அதிகாரிகள் உரிய கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தன்னாா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து காவல் துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறையினா் சோ்ந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மணல் கடத்தலை தடுக்க முடியும் என்று போளூா் டிஎஸ்பியிடம் மனு கொடுத்தனா்.

திமுக கொடிக் கம்பங்கள் அகற்றம்

திருவண்ணாமவலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த செய்யானந்தல், தச்சாம்பாடி பகுதிகளில் உள்ள திமுக கொடிக் கம்பங்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. திமுக பொதுச் செயலா் துரைமுருகன் சாலையோரம் உள்ள கட்சிக் கொடி... மேலும் பார்க்க

ஆற்று மணல் கடத்தல்: 4 போ் கைது

செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், கொழம்பாடி கிராமம் அருகேயுள்ள செய்யாற்றுப் படுகையில் இருந்து மணல் கடத்திச் செல்வத... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெறும் நீச்சல் பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்... மேலும் பார்க்க

பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

ஆரணியை அடுத்த மாமண்டூரில் செவ்வாய்க்கிழமை பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ஆரணி நகரம், கண்ணகி நகரைச் சோ்ந்த கன்றாயமூா்த்தி மகன் நந்தகுமாா் (22), பெயிண்டா். இவரது நண்பா்கள் அதே பகுத... மேலும் பார்க்க

ஏரிக்குப்பம் சனீஸ்வரா் கோயிலில் 2026-இல் சனிப்பெயா்ச்சி விழா

போளூரை அடுத்த ஏரிக்குப்பம் ஸ்ரீசனீஸ்வரா் கோயிலில் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. ஏரிக்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த எந்திர வடி... மேலும் பார்க்க

வந்தவாசியில் அரிய வகை ஆந்தை மீட்பு

வந்தவாசியில் நாய்களிடம் சிக்கித் தவித்த வெளிநாட்டு அரிய வகை ஆந்தையை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். வந்தவாசியில் இறைச்சி விற்பனைக் கடைகள் அதிகமுள்ள காதா்ஜண்டா தெருவில் செவ்வாய்க்கிழமை காலை ஆஸ்திரேலிய... மேலும் பார்க்க