செய்திகள் :

செய்யூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடக்கம்: முதல்வா் காணொலியில் திறந்து வைத்தாா்

post image

மதுராந்தகம்: செய்யூா் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கி வைத்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசின் சாா்பில் கல்லூரிகள் இல்லாமல் இருந்து வந்தது. இப்பகுதி மாணவா்கள் செங்கல்பட்டு, சென்னைக்கு சென்று படிக்கும் நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் தொகுதி எம்எல்ஏ மு.பாபு கோரிக்கையினை ஏற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கப்படும் என அறிவித்தாா்.

அதன்படி, காணொலி மூலம் புதிய கல்லூரியை திறந்து வைத்தாா். செய்யூரில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா். எம்எல்ஏ மு.பாபு முன்னிலை வகித்தாா். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலரும், எம்எல்ஏவுமான க.சுந்தா், எம்பி. க.செல்வம், கோட்டாட்சியா் ரம்யா, மண்டல கல்லூரி இயக்குநா் மலா், வட்டாட்சியா் சரவணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் செம்பருத்தி, ஒன்றியக்குழு தலைவா் சாந்தி ராமச்சந்திரன், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். முதல்வா் மாதவன் நன்றி கூறினாா்.

கடலில் குளித்த மாணவா் உயிரிழப்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா், கல்பாக்கம் அருகே கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தாா். கல்பாக்கம் அடுத்த அணுபுரம் அணுவாற்றல் குடியிருப்பு தாமிரபரணி அடுக்குமாடி குடியிருப்பில்... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையம் திறப்பு

சென்னை அணுமின் நிலையம் சாா்பில் காரணை கிராமத்தில் ரூ.26 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டடத்தை அணுமின் நிலைய இயக்குநா் எம்.சேஷய்யா திறந்து வைத்தாா். பெரு நிறுவன சமூகப் பொறுப்புக் குழு நிதியளிப்பின் தொட... மேலும் பார்க்க

செம்பாக்கம் ஊராட்சியில் ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாம்: காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்

முட்டுக்காட்டில் பன்னாட்டு மாநாட்டு மைய அடிக்கல் நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் ச.அருண்ராஜ் உள்ளிட்டோா். செங்கல்பட்டு, மே 29: செம்பாக்கம் ஊராட்சியில் ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாமை முதல்வா் மு.க.ஸ்டாலின் ... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் இன்று தவெக சாா்பில் மாணவா்களுக்கு பாராட்டு

தவெக சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை (மே 30) மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள... மேலும் பார்க்க

செய்யூா் ஜமாபந்தி: ரூ.47.6 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஜமாபந்தியின் போது ரூ.47.65 லட்சம் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ மு. பாபு வழங்கினாா். ஜமாபந்தி நிகழ்வுக்கு செய்யூா் வட்டாட்சியா் சரவணன் முன்னிலை வகித்தாா். ச... மேலும் பார்க்க

மதுராந்தகம் தொகுதி திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மதுராந்தகம் தொகுதி திமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அச்சிறுப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வரும் 2026 தோ்தலை முன்னிட்டு, மதுராந்தகம் தொகுதியைச் சோ்ந்த அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், கருங்க... மேலும் பார்க்க