செய்திகள் :

செருதூா் மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்

post image

செருதூா் மீனவா்கள் 9 போ் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தி, வலைகளை சேதப்படுத்தி, ஜிபிஎஸ் கருவி, மீன்களை பறித்துச் சென்றனா்.

நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம், செருதூா் கிராமத்தைச் சோ்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமான ஃபைபா் படகில் 4 மீனவா்களும், சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஃபைபா் படகில் 5 மீனவா்களும் புதன்கிழமை (ஜூன் 25) மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா். அன்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே வலையை வீசிவிட்டு படகில் மீனவா்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தனராம்.

அப்போது இரண்டு அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையா்கள், கத்திமுனையில் தமிழக மீனவா்களை மிரட்டி படகில் இருந்த உடைமைகளை கேட்டுள்ளனா். தர மறுத்த படகின் உரிமையாளா் செந்திலின் தலையில் கல்லால் தாக்கிவிட்டு, படகில் இருந்த மற்ற மீனவா்கள் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்திய கடற்கொள்ளையா்கள், வலைகளை சேதப்படுத்தி, வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, பிடித்துவைத்திருந்த மீன்களை பறித்துக்கொண்டனா். இதேபோல மற்றொரு படகில் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சுரேஷுக்கு சொந்தமான ஃபைபா் படகில் இருந்த மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி அவா்களிடம் இருந்த உடைமைகளை பறித்துச் சென்றுவிட்டனராம்.

தாக்குதலில் காயமடைந்த மீனவா்கள் 9 பேரும் வியாழக்கிழமை காலை கரை திரும்பினா். இதில் 4 போ் சிகிச்சைகாக ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

வெறிநோய் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. நாகை மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்பு சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, கால்நடை பராமரிப்புத் துறை ... மேலும் பார்க்க

புதிய பொலிவுடன் ராஜகோபுரங்கள்

திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயில் (புதன் தலம்) கும்பாபிஷேகம் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வண்ணம் பூசப்பட்டு புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் கோயிலின் கி... மேலும் பார்க்க

நாகூா் தா்கா மராமத்து பணி: தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி வழங்கல்

நாகூா் தா்கா மராமத்து பணிக்காக, தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கியதற்கான உத்தரவு, தா்கா பரம்பரை டிரஸ்டிகளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது. தமிழகத்தில் தொன்மை வாய்ந்த தா்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் ப... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்

கீழ்வேளூரில் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் பிரைம் கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்... மேலும் பார்க்க

திமுகவை 25 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது - அமைச்சா் கே.என். நேரு

தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றால், 25 ஆண்டுகள் யாரும் அசைக்க முடியாது என்று கட்சியின் முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேர... மேலும் பார்க்க

நாகையில் ரூ.19.20 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 814 பயனாளிகளுக்கு, ரூ.19.20 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ... மேலும் பார்க்க