செய்திகள் :

”செல்போன் எடுத்துச் செல்லவில்லை..”- ஆனால் கழிப்பறை இருக்கை வெடித்து இளைஞருக்கு தீ காயம் - எப்படி?

post image

வீட்டில் உள்ள கழிப்பறை இருக்கை வெடித்து இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவின் செக்டார் 36 இல் இந்த சம்பவம் நடந்துள்ளது. வழக்கம்போல கழிப்பறை பயன்படுத்துவதற்காக ஆஷு என்பவர் வீட்டில் கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென கழிப்பறையின் இருக்கை வெடித்து அவருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அவர் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டபோது அவருக்கு 35% தீக்காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

செல்போன் பயன்படுத்தினாரா?

கழிப்பறைக்கு செல்லும் போது ஆஷூ செல்போன் அல்லது வேறு எந்த ஒரு மின்னணு சாதனத்தையும் பயன்படுத்தவில்லை என்று அவரின் தந்தை சுனில் டி டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் கூறியிருக்கிறார்.

கேட்ஜெட் போன்ற வெடிப்புகள் இல்லை என்றும் அந்த சமயத்தில் மின் கோளாறு எதுவும் நடக்கவில்லை, வீட்டில் இருந்த ஏர் கண்டிஷனர் மற்றும் பிற உபகரணங்கள் அனைத்தும் நன்றாக இயங்கின என்றும் சுனில் கூறியிருக்கிறார்.

வெடிப்புக்கான காரணம் என்ன?

இந்தக்கட்ட தகவலின்படி, மீத்தேன் வாயு குவிப்பு வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று குடும்பத்தினர்கள் கூறியுள்ளனர். அதாவது கழிப்பறையில் குழாய்கள் அடைக்கப்படுதல் விளைவாக இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

இது குறித்து குடியிருப்பாளர் ஒருவர் டைப்ஸ் ஆப் இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டதன்படி, பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத கழிப்பறை குழாய்களில் மீத்தேன் வாயு குவியக்கூடும். காற்று போதுமானதாக இல்லாத போது அழுத்தத்தின் கீழ் வெடிக்க கூடும் என்று கூறியிருக்கிறார்.

எல்லா பாடங்களிலும் FAIL... தேர்வெழுதிய மாணவிக்கு அதிர்ச்சி - 10th தேர்வு முடிவில் நடந்த குளறுபடி!

குஜராத் மாநிலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் சோட்டா உதேபூரில் வசிக்கும் அகிக்ஷா பர்மர் என்ற மாணவி தனது 10 ஆம் வகுப்பு தேர்வு ம... மேலும் பார்க்க

"மராத்தியில் பேசினால்தான் பணம்" - டெலிவரி பாய்யிடம் வாக்குவாதம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

சமீபகாலமாக மும்பையில் அரசு அலுவலகம், வங்கியில் மராத்தி பேச வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் மராத்தி பேசாத வங்கி அதிகாரியை வங்கிக்குள் சென்று அடித்து உதைத்... மேலும் பார்க்க

பீடி இலை பறிக்கச் சென்ற பழங்குடியினப் பெண்கள் `புலி' தாக்கி இறப்பு... மகாராஷ்டிராவில் சோகம்!

மகாராஷ்டிரா மாநிலம், சந்திராப்பூரில் வனப்பகுதி அதிகமாக இருக்கிறது. அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் விறகு எடுக்க அடிக்கடி வனப்பகுதிக்குள் செல்வதுண்டு. அங்குள்ள சிந்தேவாஹி வனப்பகுதி அருகில் இருக்கும்... மேலும் பார்க்க

Miyazaki Mango: வைரத்திற்கு நிகரான விலையில் விற்கப்படும் மியாசாகி மாம்பழங்கள் - அப்படி என்ன ஸ்பெஷல்?

ஜப்பான் நாட்டில், மியாசாகி மாம்பழங்கள் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.நாடு முழுவதும் கோடை காலத்தில் மாம்பழங்களுக்கான சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஜப்பானில் உள்ள மியாசாகி மாம்பழம் மிகவும்... மேலும் பார்க்க

Yalda Hakim: பாகிஸ்தான் அமைச்சர்களை நேரலையில் அலறவிட்ட நிருபர் - யார் இந்த யால்டா ஹக்கீம்?

ஆப்கானிஸ்தானை சேர்ந்த யால்டா ஹக்கீம், மூத்த பாகிஸ்தான் அதிகாரிகளுடனான தனது அதிரடியான, தயக்கமற்ற நேர்காணல்களுக்காக பரவலான கவனத்தை ஈர்த்துள்ளார். ‘ஸ்கை நியூஸ்’ நிறுவனத்தில் பணிபுரியும் யால்டா ஹக்கீம் சம... மேலும் பார்க்க

India - Pakistan : `பாகிஸ்தானின் சீக்கிய தலம் மீது தாக்குதலா?’ - மறுத்த இந்திய அரசு | Fact check

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனித தலமான நான்கனா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள், 26 பேரை சுட்... மேலும் பார்க்க