செய்திகள் :

செல்வ அறிக்கை 2025! கோடீஸ்வர குடும்பங்கள் அதிகம் வாழும் 3வது மாநிலம் தமிழகம்!!

post image

இந்திய நாட்டில், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. தற்போது நமது நாட்டில் வாழும் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 71 ஆயிரம்.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஹூரூன் இந்திய செல்வ அறிக்கை 2025-ன்படி, நாட்டில் கோடீஸ்வர குடும்பங்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் 3வது இடத்தில் தமிழகம் உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் 1,78,600 கோடீஸ்வர குடும்பங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. அதில் குறிப்பாக மும்பை மாநகரம், கோடீஸ்வர குடும்பங்களின் தலைநகரமாக விளங்குகிறது.

இந்திய செல்வ அறிக்கை 2025 - 1 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.8 கோடியே 50 லட்சத்துக்கு மேற்பட்ட சொத்துகளை உடைய குடும்பங்கள் கணக்கிடப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் இந்த சொத்து மதிப்பைக் கொண்ட 8 லட்சத்து 71 ஆயிரத்து 700 குடும்பங்கள் இருக்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா, இவ்வாறு பெரும் செல்வந்தர்களைக் கொண்ட நாடாக இருந்திருக்கவில்லை. அதாவது கடந்த 2017ஆம் ஆண்டு 1.59 லட்சம் (1,599,900) கோடீஸ்வர குடும்பங்கள்தான் இருந்தன. இது கடந்த 2021-ஆம் ஆண்டிலோ 4.58 லட்சமாக (4,58,000) இருந்தது. ஆனால், வெறும் 4 ஆண்டுகளில் தற்போது 90 சதவீதம் வளர்ச்சி அடைந்து 8.71 லட்சம் கோடீஸ்வர குடும்பங்களாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இந்தியாவின் பலவீனமான பிரதமர் : எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து ராகுல் பதிவு

புது தில்லி: நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர் பலி!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வெள்ளிக்கிழமை பலியாகினார்.உதம்பூர் மாவட்டத்தில் உள்ள தோடா - உதம்பூர் எல்லையில் கிஷ்த்வார் வனப்பகுதியில் பயங்கரவாத... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விபத்து: போயிங், ஹனிவெல் நிறுவனங்கள் மீது வழக்கு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் போயிங் மற்றும் ஹனிவெல் நிறுவனங்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டன... மேலும் பார்க்க

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இயக்கத் திட்டம்

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய 2 ‘வந்தே பாரத்’ சரக்கு ரயில்கள் (வந்தே ப்ரைட்) தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎஃப் வளாகத்தில் நிறைவடைந்துள்ளதை அடுத்து வரும் நவம்பரில் இயக்க திட்டமிட்டுள்ளதாக அதி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரா் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உத்தம்பூா் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் காயமடைந்தாா். சியோஜ் தாா் பகுதியின் எல்லை... மேலும் பார்க்க

இந்திய வலிமையை எதிரிகளுக்கு உணா்த்திய ஆபரேஷன் சிந்தூா்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் ராணுவ வலிமையை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலமாக எதிரிகளுக்கு நிரூபித்தோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். பாகிஸ்தானுடன் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் வ... மேலும் பார்க்க