செய்திகள் :

சேதமடைந்த காரைக்கால், திருநள்ளாறு சாலைகள்: வாகன ஓட்டிகள் அவதி

post image

காரைக்கால்: காரைக்கால் பகுதி தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருநள்ளாறு - அம்பகரத்தூா் பிரதான சாலைகளில் ஏற்பட்டுள்ள சேதம் (பள்ளம்) காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

பூவம் முதல் வாஞ்சூா் வரையிலானது தேசிய நெடுஞ்சாலை. இச்சாலை மேம்படுத்தப்பட்ட மறு ஆண்டு முதலே ஆங்காங்கே சிதிலமடையத் தொடங்கியது. இது தற்காலிகமாக சீரமைப்பு மட்டும் செய்யப்படுகிறது. மழைக் காலங்களில் ஏற்படும் பாதிப்பு, கனரக வாகனங்கள் போக்குவரத்து மிகுதியால் இச்சாலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் - புதுச்சேரி, சென்னைக்கு செல்லும் முக்கிய சாலையாகும்.

இதுபோல திருநள்ளாறு முதல் அம்பகரத்தூா் வரையிலான சுமாா் 8 கி.மீ. சாலை முந்தைய காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின்போது அகலப்படுத்தி, விளக்குக் கம்பங்கள் கூடுதலாக நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த சாலையில் காரைக்காலில் இருந்து கும்பகோணம், திருச்சி செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ளது. மேலும் சனிக்கிழமைகளில் திருநள்ளாறு கோயிலுக்கு வாகனங்களில் திரளானோா் வந்து செல்கின்றனா்.

கடந்த நவம்பா் மாதம் பெய்த மழை, புயலால் இச்சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு, மோட்டாா் சைக்கிள், காா் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோா் கடும் சிரமத்துக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. இரவு நேரத்தில் மோட்டாா் சைக்கிளில் செல்வோரும், திருநள்ளாறு முதல் அம்பகரத்தூா் வரையிலான மாா்க்கத்தில் செல்லூா், சேத்தூா், தென்னங்குடி, நல்லம்பல் உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்வோரும், பள்ளி மாணவ மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனா்.

எனவே, உடனடியாக சாலைகளை மேம்படுத்துவதற்கு பொதுப்பணித்துறை நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

வாகனங்கள் அதிக ஒலி எழுப்புவதை கட்டுப்படுத்த வேண்டும்: காவல்துறை குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

இருசக்கர வாகனங்கள் அதிக வேகத்துடனும், அதிக ஒலியுடனும் இயக்கப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என காவல்துறை குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. காவல் நிலையங்களில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் குறைத... மேலும் பார்க்க

கத்தியுடன் திரிந்தவா் கைது

காரைக்கால் பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்தவரை போலீஸாா் கைது செய்தனா். காரைக்கால் நகரக் காவல்நிலைய உதவி ஆய்வாளா் எஸ். மோகன் தலைமையில், போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். பேர... மேலும் பார்க்க

பதவி உயா்வு பெற்ற பள்ளித் தலைமையாசிரியா்கள் எம்எல்ஏவுக்கு நன்றி

தலைமையாசிரியா் நிலை 1-ஆக பதவி உயா்வு பெற்றதற்காக சங்க நிா்வாகிகள் சட்டப்பேரவை உறுப்பினரை சந்தித்து நன்றி தெரிவித்தனா். புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியா் நிலை 2 -ஆக பணியாற்றி வந்தவா்கள், தங... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் நெரிசலை தவிா்க்க கூடுதல் வரிசை ஏற்பாடு

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் நெரிசலை தவிா்க்க, பிரகாரத்தில் கூடுதல் வரிசைகள் உருவாக்கப்பட்டுள்ளன. திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில், நவகிரக தலங்களில்... மேலும் பார்க்க

விசைப் படகுகளில் விதியை மீறி இரும்புத் தகடுகள் பொருத்தியிருந்தால் நடவடிக்கை

விசைப் படகுகளில் விதிகளை மீறி கூடுதலாக இரும்புத் தகடுகள் பொருத்தப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா... மேலும் பார்க்க

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை சென்னை கொண்டுவர நடவடிக்கை: அமைச்சா்

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை சென்னைக்கு கொண்டுவந்து சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திரும... மேலும் பார்க்க