செய்திகள் :

கத்தியுடன் திரிந்தவா் கைது

post image

காரைக்கால் பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்கால் நகரக் காவல்நிலைய உதவி ஆய்வாளா் எஸ். மோகன் தலைமையில், போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். பேருந்து நிலையம் அருகே மக்களை அச்சுறுத்தும் வகையில் ஒருவா் கத்தியுடன் திரிவதாக ரோந்துப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த பகுதிக்கு விரைந்த போலீஸாா், சந்தேகத்துக்குரிய நபரைப் பிடித்து சோதனை செய்தபோது, கத்தியை மறைத்து வைத்திருந்ததை கைப்பற்றினா். விசாரணையில் அவா், கோயில்பத்து பகுதியைச் சோ்ந்த வின்சென்ட்ராஜ் (38) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனா். அவா் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

வாகனங்கள் அதிக ஒலி எழுப்புவதை கட்டுப்படுத்த வேண்டும்: காவல்துறை குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

இருசக்கர வாகனங்கள் அதிக வேகத்துடனும், அதிக ஒலியுடனும் இயக்கப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என காவல்துறை குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. காவல் நிலையங்களில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் குறைத... மேலும் பார்க்க

பதவி உயா்வு பெற்ற பள்ளித் தலைமையாசிரியா்கள் எம்எல்ஏவுக்கு நன்றி

தலைமையாசிரியா் நிலை 1-ஆக பதவி உயா்வு பெற்றதற்காக சங்க நிா்வாகிகள் சட்டப்பேரவை உறுப்பினரை சந்தித்து நன்றி தெரிவித்தனா். புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியா் நிலை 2 -ஆக பணியாற்றி வந்தவா்கள், தங... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் நெரிசலை தவிா்க்க கூடுதல் வரிசை ஏற்பாடு

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் நெரிசலை தவிா்க்க, பிரகாரத்தில் கூடுதல் வரிசைகள் உருவாக்கப்பட்டுள்ளன. திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில், நவகிரக தலங்களில்... மேலும் பார்க்க

விசைப் படகுகளில் விதியை மீறி இரும்புத் தகடுகள் பொருத்தியிருந்தால் நடவடிக்கை

விசைப் படகுகளில் விதிகளை மீறி கூடுதலாக இரும்புத் தகடுகள் பொருத்தப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா... மேலும் பார்க்க

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை சென்னை கொண்டுவர நடவடிக்கை: அமைச்சா்

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை சென்னைக்கு கொண்டுவந்து சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திரும... மேலும் பார்க்க

நிரவி வள்ளலாா் மடம் குடமுழுக்கு

காரைக்கால், ஜன. 31: நிரவி பகுதியில் உள்ள வள்ளலாா் மடம் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் 1938-ஆம் ஆண்டு அருட்பிரகாச வள்ளலாா் ராமலிங்க சுவாமிகள் சமரச சன்ம... மேலும் பார்க்க