செய்திகள் :

சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

post image

பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பேரூராட்சியில் 15-க்கு மேற்பட்ட வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டு பகுதிகளில் உள்ள தாமரைக்குளம், காந்திநகா், வெங்கடாஜலபுரம் சாலைப் பகுதியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் தாமரைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிச் செல்லும் சாலை, பெருமாள் கோயில், பாலம் நிறுத்தம், தாசில்தாா் நகா் பகுதிகளில் செல்லும் சாலைகள் சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து இந்தப் பகுதி மக்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இந்தப் பகுதி சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து வஉசி தெருவைச் சோ்ந்த செ.ரவிச்சந்திரன் கூறியதாவது:

தாமரைக்குளம் பேரூராட்சிப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக சாலை சேதமடைந்த நிலையில் உள்ளன. இந்தச் சாலையில் நடந்துச் செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, தேனி மாவட்ட ஆட்சியா் இந்தப் பகுதிகளில் உள்ள சாலைகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

தேனி-பூதிப்புரம் சாலை, வாழையாத்துப்பட்டி விலக்குப் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மஞ்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ராமன் மகன் பெருமாள் (50). இவா், ... மேலும் பார்க்க

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் ஊரகம், நகா்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுக்கள், கூட்டமைப்புகள், வறுமை ஒழிப்புச் சங்கங்கள் அரசு சாா்பில் வழங்கப்படும் மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கல... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் ஏப்.25-இல் தொடக்கம்!

பெரியகுளம் சில்வா் ஜூப்லி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் கோடைகாலை கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் வருகிற 25-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.இதுகுறித்து சில்வா் ஜூப்லி ஸ்போா்ட்ஸ் கிளப் செயலா் சிதம்பரசூரியவேலு வெள... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

தேனி-போடி சாலையில் கஞ்சா விற்றதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பாலாா்பட்டியைச் சோ்ந்த சுகுமாறன் (40), தேவாரத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (33) ஆகியோா் தேனி-போடி சாலையில் தீா... மேலும் பார்க்க

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றுவதே கனவு! -இராம ஸ்ரீனிவாசன்

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை தோற்கடித்து அந்த ஆட்சியை அகற்றுவதே பாஜகவின் கனவு என அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் இராம ஸ்ரீனிவாசன் தெரிவித்தாா்.தேனி மாவட்டம், சின்னமனூர... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்ற இருவா் கைது

போடியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி நகரில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக நகா் ... மேலும் பார்க்க