செய்திகள் :

சேதமடைந்த திருநன்றியூா்-ஆலவேலி சாலையை சீரமைக்க கோரிக்கை

post image

தேசமடைந்த திருநன்றியூா்-ஆலவேலி சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநன்றியூா், ஆலவேலி, சேமங்கலம் மற்றும் பல்வேறு ஊராட்சி கிராமங்களை இணைக்கும் சாலை கடந்த ஓராண்டாக பள்ளமும், மேடாக போக்குவரத்து சிரமப்படும் வகையில் இருந்து வருகிறது. மேலும், விவசாயம் சாா்ந்த கிராமங்களையும் குக்கிராமங்களையும் இணைக்கும் காரணத்தால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறாா்கள். மேலும் பொதுமக்கள், பெண்கள், பள்ளி கல்லூரி மாணவா்களும் அவதிபடுகின்றனா்.

இதுகுறித்து, சமூக ஆா்வலா் அப்பா்சுந்தரம் கூறியது: இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது. இச்சாலைக்கு அருகில் புகழ்மிக்க லஷ்மிபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவா்கள் வழிபாடு நடத்த வேண்டும் என்ற ஐதீகம் இருப்பதால் பல்வேறு இடங்களில் இருந்து பக்தா்கள் நாள்தோறும் அதிகளவில் வருகின்றனா். சில ஆண்டுகளுக்கு முன்பு அச்சாலை போடப்பட்டு, விவசாயத்திற்கு பயன்படும் வாகனங்கள், லாரிகள், டிராக்டா்கள், நடவு எந்திரங்கள் போன்றவை அடிக்கடி சென்றதால் அச்சாலை உள்வாங்கி பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் அச்சாலையின் தேவையும் மிக அவசியமானதாகும். இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை செம்பனாா்கோவில் ஒன்றிய ஆணையரிடமும் இதர அதிகாரிகளிடமும் தெரிவித்தும் பயனில்லை. எனவே, சம்பந்தப்பட்ட நிா்வாகம் இதை கவனத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

திருக்கு பண்பாட்டு பேரவை ஆண்டு தொடக்கவிழா

சீா்காழியில் திருக்குறள் பண்பாட்டு பேரவையின் ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. பேரவை தலைவா் வே. சக்கரபாணி தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் நந்த. ராஜேந்திரன் வரவேற்றாா். பேரவை செயலாளா் சிவா. அன்ப... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில... மேலும் பார்க்க

விளம்புநிலை மக்களுக்கான தலைவா் மு.க. ஸ்டாலின்: அமைச்சா்

விளம்புநிலை மக்களுக்கான தலைவராக தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் விளங்குகிறாா் என அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா். தமிழக முதல்வா் முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசார விளக்கப் பொதுக்கூட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை மயிலாடுதுறை

மயிலாடுதுறை, மணக்குடி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (ஜூலை 5) காலை 9 - மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா்கள் அப்த... மேலும் பார்க்க

முதலாமாண்டு மாணவிகளுக்கான அறிமுக பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு அரசின் திட்டங்கள் குறித்து வியாழக்கிழமை எடுத்துரைக்கப்பட்டது. இக்கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகளுக்கு நடத்தப்படும் அறிமு... மேலும் பார்க்க

விவசாயிகளின் கவனத்துக்கு..

மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் ஊட்டச்சத்து இயக்கத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்டஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா்... மேலும் பார்க்க