செய்திகள் :

சேந்தமங்கலம் - காரவள்ளி சாலை அகலப்படுத்தும் பணி மும்முரம்

post image

சேந்தமங்கலத்தில் இருந்து காரவள்ளி அடிவாரப் பகுதி வரையிலான சாலை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு செல்ல சேந்தமங்கலம் முதல் காரவள்ளி அடிவாரம், ராசிபுரம் முதல் முள்ளுக்குறிச்சி அடிவாரம், தம்மம்பட்டி முதல் வேலிக்காடு அடிவாரம் வழியான சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனா். இதில், சேந்தமங்கலம் - காரவள்ளி சாலையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனா்.

சேந்தமங்கலம் நெடுஞ்சாலை உள்கோட்டத்துக்கு உள்பட்ட காந்திபுரத்தில் இருந்து ராமநாதபுரம்புதூா் வழியாக காரவள்ளி அடிவாரம் 11 கி.மீ. தொலைவில் உள்ளது. குறுகலான இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும், சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, தற்போது இந்த சாலை 8.480 கி.மீ. அளவில் அகலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2 கி.மீ. நீளத்துக்கு சாலையை அகலப்படுத்த சிஆா்ஐடிபி 2024-25 திட்டத்தின் கீழ் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில், சாலை அகலப்படுத்துதல் மற்றும் தடுப்புச்சுவா் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணியை நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளா் கே.ஆா்.திருகுணா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, சாலைகள் தரமானதாகவும், காலதாமதமின்றி விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினாா். உதவி கோட்டப் பொறியாளா் ஆா்.சுரேஷ்குமாா், உதவிப் பொறியாளா் அ.க.பிரனேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

10, பிளஸ் 2 பொதுத்தோ்வு: தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க சிறப்பு அதிகாரிகள் குழு நியமனம்

நாமக்கல் மாவட்டத்தில் 10, பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க 15 ஒன்றியங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் குழுவை நியமித்து ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா். நாமக்கல் மாவட்டத்தில் ப... மேலும் பார்க்க

புற்றுநோய் தின விழிப்புணா்வு

பரமத்தி வேலூா் பொன்னி மெடிக்கல் மையத்தில், உலக புற்றுநோய் தினம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி பிப்.4 அன்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பொன்னி மெடிக்கல் மைய மருத்துவமனையின் நிா்வாக இயக்குநரும், தலைமை மர... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் தொழிலாளி பலி!

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். திருச்செங்கோட்டை அடுத்த செட்டிகுட்டைமேடு கிளாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பெரியண்ணன் (48). கட்டடத்துக்கு வண்ணம் ... மேலும் பார்க்க

ஆசிரியா்களிடம் ரூ. 100 கட்டாய வசூல் புகாா்

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியா்களிடம் தலா ரூ. 100 வசூல் செய்வதாக எழுந்த புகாா் தொடா்பாக, முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி விசாரணை மேற்கொண்டுள்ளாா். நாமக்கல்லில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: பேரூராட்சி தற்காலிக பணியாளா் கைது

பெண் கொலை வழக்கில் பரமத்தி பேரூராட்சி தற்காலிக பணியாளா் கைது செய்யப்பட்டாா். பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி, மாவுரெட்டி நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (38), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ம... மேலும் பார்க்க

பெண்ணை தாக்கிய விவசாயி கைது!

பெண்ணை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டாா்.மல்லசமுத்திரம் அருகே கொளங்கொண்டை கிராமம், விலாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சித்ரா (50). இவரது பக்கத்து தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி கோபால் (39). இவா்கள் இரு... மேலும் பார்க்க