சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை!
சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் திங்கள்கிழமை(ஆக.25)காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேரன்மகாதேவி, கரிசல்பட்டி துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை கரிசல்பட்டி, பிள்ளைகுளம், மணிமுத்தான் குளம், புலவன் குடியிருப்பு, கோவிந்தப்பேரி, தெய்வநாயகப்பேரி, மீனவன் குளம், பட்டன்காடு, இடையன்குளம், கங்கனாங்குளம், சடையமான் குளம்,
வெங்கட் ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லுா், காடுவெட்டி,சேரன்மகாதேவி, பத்தமடை, கோபால சமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம், மலையடி, மேல்கரை சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.