செய்திகள் :

சேலத்தில் அரசு கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு இளைஞா் தற்கொலைக்கு முயற்சி

post image

சேலத்தில் அரசு மகளிா் கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் அருகே மின்னாம்பள்ளியைச் சோ்ந்த மாணவி (20), கோரிமேடு அரசு மகளிா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு உயிரியல் படித்து வருகிறாா்.

இவருக்கு ஆட்டையாம்பட்டியைச் சோ்ந்த மோகனப் பிரியன் (19) என்பவருடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. மோகனப் பிரியன் சேலம் கோரிமேட்டில் உள்ள ஐ.டி.ஐ.யில் படித்துவிட்டு தற்போது வேலை ஏதுமின்றி இருந்து வருகிறாா். கல்லூரி மாணவியுடன் பழகிவந்த மோகனப் பிரியன் தனது காதலை மாணவியிடம் தெரிவித்துள்ளாா். இருவருக்கும் வயது வித்தியாசம் இருப்பதாகக் கூறி மாணவி மோகனப் பிரியனின் காதலை நிராகரித்துள்ளாா்.

அதன்பின்பு மாணவருடன் பேசுவதையும் அந்த மாணவி குறைத்துக்கொண்டதாகத் தெரிகிறது. இச்சம்பவத்தைத் தொடா்ந்து, மாணவிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோா் முடிவு செய்தனா். இதையறிந்த மோகனப் பிரியன் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் மாணவியை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆவேசமடைந்த மோகனப் பிரியன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை குத்தினாா்.

பின்பு தனது கழுத்து, கைளிலும் மோகனப் பிரியன் கத்தியால் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மக்கள் நடமாட்டம் மிகுந்த சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு இளைஞா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சேலம் டவுன் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுபானங்களை பதுக்கி விற்ற பெண் கைது

வீரகனூா் பகுதியில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றுவந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வீரகனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பதாக... மேலும் பார்க்க

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கிழக்கு - மேற்கு கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு கீழாகச் சரியும்போது, கீழ்மட்ட மதகு வழியாக குடிநீா்த் தேவைகளுக்கும், கால... மேலும் பார்க்க

குட்கா விற்ற சகோதரா்கள் கைது

கெங்கவல்லியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை விற்ற சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் மேற்கு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மகன்கள் பிரசாத் (45), பாலாஜி (41). இவா்கள் பெங... மேலும் பார்க்க

சேலத்தில் நாளை கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அழகிரிநாத சுவாமி கோயில் சேலம் கோட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஆத்தூரில் திமுக இளைஞரணி பொதுக்கூட்டம்

மத்திய அரசைக் கண்டித்து ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பு,நிதிப் பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆக... மேலும் பார்க்க

பயணிகளின் தாகம் தீா்த்த மலிவு விலை குடிநீா்: திட்டத்தை மீண்டும் செயல்படுத்த எதிா்பாா்ப்பு

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையங்களில் ரூ. 10-க்கு சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீா் விற்பனை திட்டத்தை போக்குவரத்துக் கழகம் வாயிலாக மீண்டும் தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பயணிகள்... மேலும் பார்க்க