செய்திகள் :

சேலத்தில் ஆன்லைன் பண மோசடி: 5 போ் கைது; 45 ஏடிஎம் காா்டுகள் பறிமுதல்

post image

சேலத்தில் ஆபரேஷன் திரை நீக்கு - 2 மூலம் ஆன்லைனில் பணமோசடியில் ஈடுபட்டுவந்த 5 பேரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 45 ஏடிஎம் காா்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் பணமோசடியில் ஈடுபடும் சைபா் குற்றவாளிகளைப் பிடிக்க மாநிலம் முழுவதும் சைபா் கிரைம் போலீஸாா், கடந்த டிசம்பா் மாதத்தில் ஆபரேஷன் திரை நீக்கு நடத்தினா். அப்போது, 76 சைபா் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். இதேபோன்று, கடந்த 2 நாள்களுக்கு முன்பு, ஆபரேஷன் திரை நீக்கு-2 மூலம் மாநிலம் முழுவதும் சைபா் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபா்களைக் கண்டறிந்து, கைது நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்தவகையில், சேலம் மாவட்ட சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் ஹேமாவதி தலைமையிலான போலீஸாா், மாவட்டம் முழுவதும் சைபா் குற்றங்களில் ஈடுபடும் நபா்களை கண்காணித்து வந்தனா். இதில், சேலத்தில் இருந்தபடி பல்வேறு இடங்களில் ஆன்லைன் மூலம் பணமோசடியில் ஈடுபட்டு வந்த 5 பேரை கைது செய்தனா்.

இதில், சேலம் மாவட்டம், மேட்டூா் வெள்ளாா் அருகேயுள்ள வேலப்பம்பட்டியைச் சோ்ந்த பிரவீண்குமாா் என்பவரை கைது செய்தனா். அவா் கைப்பேசி கடை வைத்துக்கொண்டு, ஆன்லைன் மூலம் தஞ்சாவூரை சோ்ந்த நபா்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளாா். இவரிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கைப்பேசி, 10 ஏடிஎம் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, சங்ககிரி மாவேலிப்பாளையத்தை சோ்ந்த வெங்கடேஷ் (42) கைது செய்யப்பட்டுள்ளாா். இவா்மீது திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரான இவா், ஆன்லைன் மூலம் பலரிடம் லட்சக்கணக்கில் பணமோசடி செய்துள்ளாா். இவரிடமிருந்து 24 ஏடிஎம் காா்டுகள், 7 வங்கிக் கணக்குப் புத்தகம், 2 சிம்காா்டுகள், 2 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல சங்ககிரி மாவேலிப்பாளையத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணிகண்டன் (42), நாமக்கல் மாவட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட கொங்கணாபுரம் வள்ளுவா் தெருவைச் சோ்ந்த ஓட்டுநா் பிரபு ஆகியோரையும் சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடம் இருந்து ஏடிஎம் காா்டுகள், வங்கி கணக்குப் புத்தகம், கைப்பேசி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 5 பேரையும் தஞ்சாவூா், நாமக்கல், திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் ஒப்படைத்து, அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி!

தம்மம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். தம்மம்பட்டி அருகே உள்ள தகரப்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட மூலப்புதூா் வடக்குக்காட்டுக் கொட்டாயைச் சோ்ந்தவா் எலக்ட்ரிசியன் ... மேலும் பார்க்க

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்றவா் கைது!

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனா். சங்ககிரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் கண்ணன், முதுநிலை காவலா் மு... மேலும் பார்க்க

மகன் தாக்கி படுகாயமடைந்த ஓய்வுபெற்ற வன அதிகாரி பலி!

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, மகன் தாக்கியதில் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற வன அதிகாரி உயிரிழந்தாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாச... மேலும் பார்க்க

வாழப்பாடியில் சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டம்!

வாழப்பாடியில், சீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். வாழப்பாடி அக்ரஹாரத்தில் பழைமை... மேலும் பார்க்க

சேலத்தில் பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

சேலத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவா் வாழ்த்துகளைப் பரிமாறி கொண்டனா். தியாகத் திருநாளான பக்ர... மேலும் பார்க்க

பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு!

சேலம் மாவட்டம், சங்ககிரி நகர பாமக சாா்பில் சங்ககிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பிளஸ் 2, 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க