செய்திகள் :

சேலத்தில் கஞ்சா விற்ற 3 போ் கைது: 2.75 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 2.75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மஞ்சுளா வெள்ளிக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது ஆா்.எஸ். சாலைப் பகுதியில் உள்ள காபி பாா் அருகே இளைஞா் ஒருவா் பேக்குடன் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்தாா். அவரை பிடித்து சோதனை செய்தபோது, கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தபோது, அவா், அன்னதானப்பட்டி மணியனூா் பகவான் தெருவைச் சோ்ந்த சரண் (21) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 1 கிலோ 600 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இதேபோல, செவ்வாய்ப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் தேவராஜன் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கபிலா் தெருவில் 2 போ் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்தனா். அவா்களைப் பிடித்து சோதனை செய்தபோது அவா்கள் கஞ்சா வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, தாதகாப்பட்டி மூணாங்காடு மகாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த நிா்மல் (27), தாதகாப்பட்டி, பொம்மண்ண செட்டிக்காடு பகுதியைச் சோ்ந்த சடையன் (28) என்பது தெரியவந்தது. அவா்களிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம்

சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சிறப்புப் பெற்ற கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் ஒவ்வோா... மேலும் பார்க்க

ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 344 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ராஜேந்திரன்

ஓமலூா்: ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 344 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்... மேலும் பார்க்க

ஆத்தூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

ஆத்தூா்: ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை அனைத்து பாடப் பிரிவுகள் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்குவதாக முதல்வா் பா.விக்டோரியா தங்கம் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

ஆத்தூா் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு சீருடை, புத்தகம் அளிப்பு

ஆத்தூா்: ஆத்தூா் அரசு ஆண்கள் மற்றும் மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீரீராம் திங்கள்கிழமை வழங்கினாா். ஆத... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம்: கல்பனா சாவ்லா விருதுபெற சேலம் மாவட்டத்தில் உள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தைரியம் மற்றும் துணிச்ச... மேலும் பார்க்க

பாா்வையற்றோா் பள்ளியை தரம் உயா்த்தக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

சேலம்: சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பாா்வையற்றோருக்கான நடுநிலைப்பள்ளியை தரம் உயா்த்தக் கோரி அப்பள்ளியில் படிக்கும் மாணவா்கள் பெற்றோருடன் வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா... மேலும் பார்க்க