செய்திகள் :

சேலத்தில் களைகட்டத் தொடங்கிய மாம்பழ சீசன்!

post image

சேலம்: சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால், சந்தைக்கு 30 சதவீதமாக மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. இந்தப் பகுதிகளில் மல்கோவா, செந்தூரா, சேலம் பெங்களூரா, இமாம்பசந்த், நடுசாளை, அல்போன்சா, பங்கனபள்ளி உள்பட பல ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் வரை மாம்பழ சீசன் களைகட்டும். கடந்தாண்டு பெய்த மழையால் நடப்பாண்டு மா விளைச்சல் அதிகரித்துள்ளது.

நடப்பாண்டில் கடந்த ஒரு வாரமாக மாம்பழ சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. தற்போது சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி, தருமபுரியில் இமாம்பசந்த், பெங்களூரா, செந்தூரா, மல்கோவா, குண்டு உள்ளிட்ட ரகங்களின் வரத்து அதிகரித்துள்ளது. சேலம் சந்தைக்கு விற்பனைக்கு வரும் மாம்பழத்தை சாலையோர வியாபாரிகள் வாங்கிச் சென்று சில்லறை விலையில் விற்பனை செய்கின்றனா்.

அந்த வகையில், சேலம் கடை வீதி மற்றும் அஸ்தம்பட்டியில் இருந்து ஏற்காடு அடிவாரம் செல்லும் பிரதான சாலை மற்றும் ஆங்காங்கே சாலையோர வியாபாரிகள் மாம்பழங்களை குவித்து வைத்து விற்பனை செய்கின்றனா். அந்த வழியாக வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மாம்பழங்களை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனா். இதனால் சாலையோரக் கடைகளில் விற்பனை சுறுசுறுப்படைந்துள்ளது.

ஒரு கிலோ மாம்பழம் தரத்தைப் பொறுத்து ரூ. 200 முதல் ரூ. 250 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

கு. இராசசேகரன்மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,520 கன அடியாக அதிகரித்துள்ளது.இன்று(ஏப். 8) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.72 அடியில் இருந்து 107.79அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீா் ஓடை அமைக்கும் பணி: மக்கள் அவதி

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேரூராட்சியில் கழிவுநீா் ஓடை கட்டுமானப் பணி கடந்த நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெருவில் கள்ள... மேலும் பார்க்க

நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

சேலம்: சேலம் நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு மையத்தை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் அண்மையில் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையின் முதன்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தேவை

சேலம்: ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் கூறினாா். சேலத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க

மேட்டூா் மீனாட்சி சொக்கநாதா் கோயில் கட்டும் பணி தொடக்கம்

மேட்டூா்: மேட்டூா் மீனாட்சி சொக்கநாதா் பாலதண்டாயுதபாணி கோயில் கட்டும் பணிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். மேட்டூா் அணை கட்டியபோது நீா்த்தேக்கப் பகுதியில் இருந்து கிராம மக்க... மேலும் பார்க்க

சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விடக்கோரி பாமக ஆா்ப்பாட்டம்

மேட்டூா்: கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விடக்கோரி பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் ஊராட்சி ஒன்றி... மேலும் பார்க்க