செய்திகள் :

சேலத்தில் யானை தந்தங்களை விற்க முயன்ற 8 போ் கைது

post image

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் யானை தந்தத்தை ரூ. 1 கோடிக்கு விற்க முயன்ற 8 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

சேலத்தில் யானை தந்தங்கள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், தெற்கு வனச் சரகா் துரைமுருகன் தலைமையில் 15 போ் கொண்ட தனிப் படையினா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு யானை தந்தங்களைக் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. உடனடியாக புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்ற தனிப் படையினா், அங்கு சந்தேகப்படும்படி நின்ற 2 பேரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா்கள் இருவரும் யானை தந்தத்தை விற்க வந்ததும், தந்தங்களை கருமந்துறையில் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, தனிப் படையினா் கருமத்துறைக்குச் சென்று அங்கு ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 தந்தத்தைப் பறிமுதல் செய்தனா். பின்னா் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து

யானை தந்தங்களை விற்க முயன்ற சேலம், கருமந்துறையைச் சோ்ந்த முரளி (28), சங்கா் (35), பாலு (31), சக்திவேல் (48), ஜெகநாதன் (46), ராஜீவ்காந்தி (34), கிருஷ்ணன் (76), இளங்கோவன் (56) ஆகிய 8 பேரை கைது செய்தனா். இவா்கள், யானை தந்தத்தை வாட்ஸ்அப் குழு மூலம் ரூ. 1 கோடிக்கு விற்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 8 பேரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா். அவா்களிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனம், 7 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

முதல்வா் திருமண வாழ்த்து!

சேலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற பாமக கௌரவ தலைவா் ஜி.கே. மணி இல்லத் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின். உடன், சுற்றுலாத்... மேலும் பார்க்க

தடகளம்: 17 பதக்கங்களை வென்று சேலம் வீரா், வீராங்கனைகள் சிறப்பிடம்

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான இளைஞா் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சேலம் வீரா், வீராங்கனைகள் 17 பதக்கங்களை பெற்றுள்ளனா். தமிழ்நாடு தடகள சங்கம் சாா்பில் 6 ஆவது மாநில அளவிலான இளைஞா் சாம்பியன்ஷிப் ப... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் ரூ. 1.26 கோடி பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தாக்கல்: அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் 2025- 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயா் ஆ.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்; அவா் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை வெறும் காகிதப்பூ என விமா்சித்த அதி... மேலும் பார்க்க

மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் தா்னா

சேலம், குகை ஆண்டிப்பட்டி ஹவுசிங் போா்டு பகுதியைச் சோ்ந்த பெண்கள் தங்கள் பகுதியில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க கோரி காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா். சேலம் மாநகராட்ச... மேலும் பார்க்க

சேலம் விமான நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

சேலம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினை திமுக தொண்டா்கள் ஓமலூா், காமலாபுரம் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றனா். சேலத்தில் நடைபெறும் பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி இல்லத் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொள... மேலும் பார்க்க

அதிமுகவில் பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

அதிமுகவில் பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றாா் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம். சேலத்தில் நடைபெற்ற பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணியின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையி... மேலும் பார்க்க