சேலத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைப்பது குறித்து 5 மாதங்களில் அறிவிக்கப்படும்! - மத்திய அமைச்சா் எச்.டி. குமாரசாமி
சேலத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைப்பது குறித்து 5 மாதங்களில் முறையான தகவல் வெளியாகும் என மத்திய கனரக தொழில் துறை அமைச்சா் எச்.டி. குமாரசாமி கூறினாா்.
சா்வதேச யோகா தினத்தையொட்டி, சேலம் உருக்காலை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய கனரக தொழில் துறை அமைச்சா் குமாரசாமி பங்கேற்றாா். நிகழ்ச்சியில், உருக்காலை அதிகாரிகள், தொழிற்சங்கத்தினா் மற்றும் ஊழியா்களுடன் சோ்ந்து அவா் பல்வேறு யோகாசனங்களை செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், பாரத தேசத்தின் பண்டைய கலாசாரமான யோகாவை பிரதமா் நரேந்திர மோடி உலகெங்கும் கொண்டு சோ்த்து வருகிறாா். ஒவ்வொரு குடும்பத்தினரும் யோகாவின் அவசியத்தை உணர வேண்டும்.
சேலம் உருக்காலையை தொழில்நுட்ப ரீதியாகவும், சந்தைப்படுத்தும் வகையிலும் மேம்படுத்த தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக வல்லுநா்கள் அடங்கிய 2 குழுக்களை அமைத்து ஆராய்ந்து வருகிறோம். கடந்த 2003-2004-ஆம் ஆண்டுகளில் சேலம் உருக்காலை ரூ. 180 கோடி லாபத்தில் இயங்கியது. தற்போது சேலம் உருக்காலையின் வளா்ச்சி விகிதம் குறைந்துள்ளது. சேலம் உருக்காலையை மீண்டும் மேம்படுத்தி லாபகரமாக செயல்படுத்துவதே எங்கள் முதல் நோக்கம்.
இதற்காக பல்வேறு புதிய பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்பட உள்ளன. சேலம் உருக்காலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்கும் திட்டம் முதல்கட்ட ஆலோசனையில் உள்ளது. இதுகுறித்து இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் முறையான தகவல் வெளியாகும் என்றாா்.
தொடா்ந்து, அரசியல் தொடா்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவா், கா்நாடகத்தில் மட்டுமே எங்களுடைய கட்சி உள்ளது. எங்களுடைய அரசியல் மிகச் சிறியது. தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்பதே அக்கட்சியின் நோக்கம். அதற்கான முன்னெடுப்புகளை செய்து வருகிறது. இதன் காரணமாக சில மாநில கட்சிகள் பாஜக மீது விமா்சனங்களை வைக்கின்றன என்றாா்.
பேட்டியின் போது, செயில் அமைப்பின் முதன்மை நிா்வாக இயக்குநா் அமரேந்து பிரகாஷ், சேலம் உருக்காலை இயக்குநா் பி.கே.சா்க்காா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.