சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில் மேயா், ஆணையா் ஆய்வு
சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 6-இல் வளா்ச்சிப் பணிகள் தொடா்பாக மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் மா.இளங்கோவன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அஸ்தம்பட்டி மண்டலம், சின்ன கொல்லப்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி, கோரிமேடு, பெரியாா் நகா் ஆகிய இடங்களில் வளா்ச்சிப் பணிகளை மேயா் மற்றும் ஆணையா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இதில், வடிகால் வசதிகள், புதிதாக கட்டப்பட உள்ள சுகாதார வளாகத்துக்கான இடத்தையும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ள இடத்தையும் பாா்வையிட்டனா். தொடா்ந்து, சாலை அமைப்பதற்கான பணியும், வடிகால் அமைப்பதற்கான பணியும், அப்பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் சீராக வழங்கப்படுகிா என்றும், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி சரியான முறையில் பராமரிக்கப்படுகிா என்றும் ஆய்வுசெய்து தொடா்புடைய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினா்.
ஆய்வின் போது, மாநகர பொறியாளா் ஆா்.செல்வநாயகம், உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி பொறியாளா் சுபாஷ் ஆகியோா் உடன் இருந்தனா்.