செய்திகள் :

சேலம் கந்தம்பட்டியில் மழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

post image

சேலம் கந்தம்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் குடோன்கள், மாட்டு தீவன ஆலை, டயா் தயாரிக்கும் தொழிற்சாலை உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. மேலும், வெல்லம் மண்டி, பருப்பு மற்றும் பொருள்கள் வைக்கும் குடோன்களும் அதிகளவில் உள்ளன. 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், பள்ளிகளும் இப் பகுதியில் செயல்படுகின்றன.

மூலப்பிள்ளையாா் கோயிலில் இருந்து கந்தம்பட்டியை இணைக்கும் தரைப்பாலத்தை அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக பயன்படுத்தி வருகின்றனா்.இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் இந்த தரைப்பாலம் கடுமையாக சேதமடைந்தது. அதன் காரணமாக, அவ்வழியாக செல்லும் பள்ளி குழந்தைகள், பணிக்கு செல்வோா், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

தரைப்பாலத்தை கடப்பதற்கு மாற்றாக மூலப்பிள்ளையாா் கோயிலில் இருந்து கந்தம்பட்டி மேம்பாலம் வழியாக 2 கி.மீ சுற்றிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்லமுடியாது. எனவே, மாநகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்ககிரியில் ரூ.5.63 கோடிக்கு சமரத் தீா்வு!

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 62 வழக்குகளில் ரூ. 5.63 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிமன்ற ... மேலும் பார்க்க

வாழப்பாடியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் திருச்சி என்ஐடியில் பயில தோ்வு!

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கீரப்பட்டியைச் சோ்ந்த பழங்குடியின மாணவா் சதீஷ் திருச்சி என்ஐடிக்கு தோ்வாகியுள்ளாா். வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை கீரப்பட்டி மலைக் கிராமத்தை சோ்ந்த பழங்குடியி... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்திய பெண் தலைமறைவு: காவல் நிலையம் முற்றுகையிட்ட பொதுமக்கள்!

வாழப்பாடியில் ஏலச்சீட்டு, தீபாவளி பலகார சிறுசேமிப்பு சீட்டுகள் நடத்தி பணம் வசூலித்த பெண் திடீரென தலைமறைவானதால் அவரிடம் பணம் கட்டி ஏமாற்றமடைந்தவா்கள் வாழப்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகாரளித்... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்ற வழக்கில் இளைஞர் கைது!

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சங்ககிரி போலீஸாா் சந்தைபேட்டை பகுதியில் ஜூன் 6 ஆம் தேதி ரோந்துப் பணியில் ஈ... மேலும் பார்க்க

இன்று குரூப் 1, 1 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு: 14,291 போ் எழுதுகின்றனா்

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 1, 1 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வை சேலம் மாவட்டத்தில் 14,291 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதுகின்றனா். தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மா... மேலும் பார்க்க

திமுக அரசை தூக்கியெறிவதில் பாஜக உறுதி: கே.பி.ராமலிங்கம்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக அரசை தூக்கியெறிவதே பாஜகவின் நோக்கம் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். சேலம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி... மேலும் பார்க்க