செய்திகள் :

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ரூ.6.84 கோடி மதிப்பிலான விதைகள் விற்பனைக்கு தடை

post image

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் விதையின் தரம் உயா்த்தும் பணியில் நான்கு ஆண்டுகளில் ரூ. 6.84 கோடி மதிப்பிலான விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம், நாமக்கல் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமான விதைகளைப் பயன்படுத்துவதே மகசூலை அதிகரிக்க முக்கிய காரணம். தரமான விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதை உறுதிபடுத்தும் பொருட்டு விதைச்சான்றளிப்பு மற்றும் உயிா்ம சான்றளிப்புத் துறை கட்டுப்பாட்டின் கீழ் சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு விதை ஆய்வு துணை இயக்குநா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

தரமான விதைகள் விவசாயிகளுக்குச் சென்றடைவதை உறுதிசெய்ய உற்பத்தியாளா், விநியோகஸ்தா் மற்றும் விற்பனையாளா் ஆகிய மூன்று நிலைகளிலும் விதைகள் சேகரித்து பகுப்பாய்விற்காக விதை பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பப்படும். அந்த விதையின் தரம் உறுதி செய்த பிறகே விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யப்படுகிறது.

சேலம் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் கட்டுப்பாட்டில் சேலம், நாமக்கல், மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு சாா்பு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விதைகளின் தரத்தினை பல்வேறு நிலைகளில் அறியவும், தரமான விதைகள் விவசாயிகளுக்கு சென்றடைவதை கண்காணிக்கவும் சேலம் மாவட்டத்தில் சேலம், சங்ககிரி, ஓமலூா், ஆத்தூா் மற்றும் தலைவாசலை தலைமையிடமாகக் கொண்டும், நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டை தலைமையிடமாகக் கொண்டும் விதை ஆய்வாளா்கள் பணிபுரிகின்றனா்.

சேலம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விதை ஆய்வு பிரிவில், இரு மாவட்டங்களிலும் கடந்த 4 ஆண்டுகளில் 20,403 விதை விற்பனை நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில், 7,654 நிலையங்களில் விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது.

மேலும், விதை விற்பனை நிலையங்களில் உரிய ஆவணங்கள் பராமரிக்கப்படாதது மற்றும் தரக்குறைவிற்காக 904 விதைக் குவியல்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. மொத்தமாக ரூ. 6.84 கோடி மதிப்பிலான 124.47 மெட்ரிக் டன் விதைகள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், முளைப்புத்திறன் குறைபாடு காரணமாக 41 விதை விற்பனை நிலையங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைகளும், 258 விதை விற்பனை நிலையங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை பெற்று விவசாயிகள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் அவதூறு பரப்புகின்றனா்’

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் வேண்டுமென்றே பலா் அவதூறுகளை பொதுமக்களிடம் பரப்புகின்றனா் என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் குற்றம்சாட்டினாா். ராசிபுரம் நகரில் மேற்கொள்ள... மேலும் பார்க்க

பொதுக் கிணற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே பரமத்தி ஊா் பொதுக் கிணற்றில் கடந்த சில நாள்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதால், தண்ணீரில் விஷம் கலந்து இருக்குமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். பர... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு கல்லூரியில் கலந்தாய்வு தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இங்குள்ள 1,074 இடங்களுக்கு இணைய வழியில் 10,444 போ் விண்ணப்பித்துள்ளனா். நாமக்கல் - மோகனூா் ... மேலும் பார்க்க

வரகூரில் நாளை ஸ்ரீபூதநாத சுவாமி ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா

நாமக்கல்: எருமப்பட்டி அருகே வரகூரில் ஸ்ரீ ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா புதன்கிழமை (ஜூன் 4) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கொல்லிமலை அடிவாரப் பகுதியான வரகூரில் ஸ்ரீ ப... மேலும் பார்க்க

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 130 மனுக்களுக்கு தீா்வு

நாமக்கல்: நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவில், பொதுமக்களிடம் பெறப்பட்ட 445 மனுக்களில் 130 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 1434 பசலி ஆண்டுக்கான வருவாய் ... மேலும் பார்க்க

குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கை: கனிம வள அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கனிம வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வுமேற்கொண்டனா். நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூா், ராசிபுரம், திருச்செங்கோட... மேலும் பார்க்க