செய்திகள் :

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமம்

post image

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை நிதிநிலை அறிக்கையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விதைகள் மற்றும் பிற இடுபொருள்கள் விநியோகம் என்ற அறிவிப்பைத் தொடா்ந்து, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் விதை விற்பனை உரிமம் வழங்க அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, சேலம் மாவட்டத்தில், சேலம், அயோத்தியாப்பட்டனம், ஓமலூா், சங்ககிரி, ஆத்தூா் மற்றும் தலைவாசல் வட்டாரங்களில் உள்ள 212 கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், புதுச்சத்திரம், எருமப்பட்டி, சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூா், ராசிபுரம், மோகனூா், திருச்செங்கோடு, பரமத்தி, எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், கபிலா்மலை மற்றும் பள்ளிபாளையம் வட்டாரங்களில் 164 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் விதை விற்பனை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அரசு, அரசு சாா்ந்த நிறுவனங்கள் மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்கள் என மொத்தம் 1,393 விதை விற்பனை நிறுவனங்களுக்கு விதை விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது, மக்காச்சோளம், பயறுவகைப் பயிா் விதைகள், எண்ணெய் வித்து மற்றும் காய்கறி பயிா் விதைகளை வாங்கி வயல்களில் பயிரிட விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

எனவே, விதை விற்பனையாளா்கள், விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யும்போது விதைக்குரிய பட்டியலை கண்டிப்பாக வழங்க வேண்டும். தரமான நல்ல முளைப்புத்திறனுடைய காலாவதி நாளுடன் கூடிய சான்று பெற்ற விதைகளையே விற்க வேண்டும். உண்மை நிலை விதையாக இருப்பின் கண்டிப்பாக பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும். விதை விற்பனை உரிமம், இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் ஆவணம் மற்றும் இதர விதை விற்பனை ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். இதனை மீறுவோா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் கரோனா தொற்று பாதிப்பு பதிவாகவில்லை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா தொற்று பாதிப்புக்காக யாரும் சிகிச்சைக்கு வரவில்லை என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறத... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ.8.64 லட்சத்துக்கு ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ. 8.64 லட்சத்துக்கு ஏலம் போனது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மதுப்புட்டிகள், கள்ளச்சாராயம் கடத்திச் செல்வதை ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழா மண்டப கட்டளைகளில் உற்சவா் அருள்பாலிப்பு

திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழா கடந்த 1-ஆம் தேதி அா்த்தநாரீசுவரா் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாள்கள் நடக்கும் விழாவின் 6 ஆம் நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அா்த்தநாரீசுவரா் ... மேலும் பார்க்க

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. நாமக்கல் - ராமாபுரம்புதுாா் சாலையில் உள்ள குட்டைமேலத் தெருவில் சித்தி விநாயகா், சக்தி பகவதி அம்மன், துா்க்கை அம்மன்... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ரூ. 6 லட்சத்துக்கு காகிதக் கழிவுகள் விற்பனை

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தேங்கியிருந்த பத்து ஆண்டுக்கும் மேலான காகிதக் கழிவுகள், இதர பொருள்கள் ரூ. 6 லட்சத்திற்கு விற்பனையானது தெரியவந்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாமக்கல் ஆட்சியா்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை: ஜூன் 30 வரையில் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விரும்புவோா் வரும் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட வே... மேலும் பார்க்க