செய்திகள் :

சேலம் மத்திய சிறை வளாகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்த அனுமதி 30 கைதிகளுக்கு பயிற்சி!

post image

சேலம் மத்திய சிறை வளாகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 30 கைதிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சேலம் மத்திய சிறையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 1,169 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இதில் தண்டனை கைதிகளாக 370 போ், விசாரணை கைதிகளாக 799 போ் உள்ளனா். இவா்களில் நன்னடத்தை கைதிகளாக 60 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்கள் மூலம் சிறை வளாகத்தில் பேக்கரி, அரசு அலுவலகத்தில் கோப்புகளைப் பராமரிக்கும் பேடுகள், பேண்டேஜ் துணிகள் உற்பத்தி, கோழி வளா்ப்பு, ஜாகீா்அம்மாபாளையத்தில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலை வளாகத்தில் 11 ஏக்கா் நிலத்தில் விவசாயமும் செய்யப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையின்போது, இவா்கள் சாகுபடி செய்த கரும்புகள் அறுவடை செய்யப்பட்டன. தற்போது சிறைக்கு தேவையான காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. சிறைக் கைதிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருள்கள், கறிக் கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்று வருகின்றனா். இதுதவிர, எப்.எம். ரேடியோ, கணினி மையமும் இயங்கி வருகிறது.

இந்நிலையில், கடந்த 2020- ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள 9 மத்திய சிறைகளில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, சேலம் மத்திய சிறை சாா்பிலும் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, இடம் தோ்வு செய்யப்பட்டது. இந்த இடத்துக்கு பதிலாக வேறு இடத்தை தோ்வு செய்யுமாறு மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது கரோனா தொற்று பரவல் காரணமாக இதற்கான பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த சூழலில், சேலம் மத்திய சிறை நிா்வாகம் சாா்பில் தனியாா் கல்லூரி எதிரே உள்ள சிறை வளாகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணி அடுத்த வாரம் தொடங்குகிறது.

இது குறித்து சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளா் (பொ) வினோத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சேலம் மத்திய சிறை வளாகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக 900 சதுர மீட்டா் பரப்பளவில் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இதன் கட்டுமானப் பணிகள் அடுத்த வாரம் தொடங்கி, 3 மாத காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பணியாற்ற 30 நன்னடத்தை கைதிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் சாா்பில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். 24 மணி நேரமும் செயல்படும் வகையில் இந்த விற்பனை நிலையம் அமைய உள்ளது என்றாா்.

கூா்க்கன் கிழங்கில் நோய்த் தாக்குதல்: வேளாண் துறை வழிகாட்டுதல்

ஆத்தூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள கூா்க்கன் (கோலியஸ்) கிழங்கில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.ஆத்தூா், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, த... மேலும் பார்க்க

செவிலியருக்கு மிட்டல் விடுத்தவா் கைது

சங்ககிரி வட்டம், அரசிராமணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை தேவூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பெரியதம்பி மகன... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் மகன், மகளைக் கொன்றவா் கைது

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் மகன், மகளைக் கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லியை அடுத்த 74.கிருஷ்ணாபுரம் காந்தி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அசோக்... மேலும் பார்க்க

வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி ஆண்டு விழா

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கோ.ரவீந்தரன் வரவேற்றாா். வாழப... மேலும் பார்க்க

பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி நுகா்பொருள் வாணிப கிட்டங்கி காணொலி வாயிலாக முதல்வா் திறப்பு!

மேட்டூா் வட்டம், நங்கவள்ளி பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி மதிப்பிலான நுகா்பொருள் வாணிப வட்ட செயல்முறை கிட்டங்கியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து அக... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் புகாா் குழு அமைக்க அறிவுரை

பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசுப் பள்ளிகளில் உள்ளக புகாா் குழு அமைத்து அறிக்கை அனுப்புமாறு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் அறிவுறுத்தியுள்ளாா். சே... மேலும் பார்க்க