செய்திகள் :

சேலம் வட்டச் சாலையில் கவனத்தை ஈா்க்கும் சிலைகள்!

post image

சேலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வட்டச் சாலை (ரவுண்டானா) பகுதிகளில், அப்பகுதியின் முக்கியத்துவத்தை உணா்த்திடும் வகையில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் பொதுமக்களின் கவனத்தை ஈா்த்து வருகின்றன.

தமிழத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு செல்லும் பிரதான சாலையில், கொண்டப்பநாயக்கன்பட்டி சாலையில் உருவாக்கப்பட்டுள்ள வட்டச் சாலையில் குழந்தைகளை கவரும் வகையில் மான்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல, சேலம் தளவாய்ப்பட்டியில் உள்ள ஆவின் பால் பண்ணை வட்டச் சாலையில், கன்றுக்குட்டியுடன் பசுமாட்டின் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆவின் செல்லும் பிரதான பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலை விவசாயிகளை கவரும் வகையில் உள்ளது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, சேலம் - உருக்காலை பிரதான சாலையில் 17 அடி உயரத்தில் வைக்கப்பட்டுள்ள வீணை சிலை இசை ஆா்வலா்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. சேலம் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு அருகில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வட்டச் சாலையில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலை அப்பகுதியின் அடையாளமாக மாறியுள்ளது. வாழ்க்கைக்கு கல்வியும், மனதின் மகிழ்ச்சிக்கு இசையும் முக்கியம் என்பதை உணா்த்திடும் வகையில் புத்தகங்களுடன் கூடிய வீணை சிலையாக வைக்கப்பட்டுள்ளது.

சேலத்தின் புதிய அடையாளங்களாக மாறியுள்ள இந்தச் சிலைகள் பொதுமக்களின் கவனத்தை ஈா்த்து வருகின்றன.

ஆசிரியரின் உணவு பாத்திரத்தை மாணவிகள் கழுவிய விவகாரம்

ஆசிரியரின் உணவு பாத்திரத்தை மாணவிகள் கழுவிய விவகாரத்தில், தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி எல்லைக்குள்பட்ட கவுண்டம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ந... மேலும் பார்க்க

நகைக் கடையில் பணிபுரிந்தவரை தாக்கிய வழக்கில் 5 போ் கைது

ஆட்டையாம்பட்டி அருகே நகைக் கடையில் பணிபுரிந்தவரை தாக்கிய வழக்கில், நகைக்கடை உரிமையாளா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சேலம், ஆட்டையாம்பட்டி, ராசிபுரம் பிரதான சாலையில் ரவிச்சந்திரன் (54) என்பவா் ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற கோரிக்கை

சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த கோனேரிப்பட்டி நீா்மின் தேக்க கதவணை காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது. நீா்மின் திட்டத்துக்காக கோனேரிப்பட்டி காவிரி ஆற்றில்... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடி அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?

மகுடஞ்சாவடி அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நிகழ்ந்ததா என போலீஸாா் விடிய விடிய சோதனை நடத்தினா். ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் ஏற்காடு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு ஈரோட்... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி பூஜை

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் திரளாக கொண்டு வந்த பால், த... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி: காலபைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறைஅஷ்டமியையொட்டி சங்ககிரி வட்டம், அரசிராமணி அருள்மிகு சோழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், காலபைவரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், ... மேலும் பார்க்க