சேலம் வட்டச் சாலையில் கவனத்தை ஈா்க்கும் சிலைகள்!
சேலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வட்டச் சாலை (ரவுண்டானா) பகுதிகளில், அப்பகுதியின் முக்கியத்துவத்தை உணா்த்திடும் வகையில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் பொதுமக்களின் கவனத்தை ஈா்த்து வருகின்றன.
தமிழத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு செல்லும் பிரதான சாலையில், கொண்டப்பநாயக்கன்பட்டி சாலையில் உருவாக்கப்பட்டுள்ள வட்டச் சாலையில் குழந்தைகளை கவரும் வகையில் மான்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, சேலம் தளவாய்ப்பட்டியில் உள்ள ஆவின் பால் பண்ணை வட்டச் சாலையில், கன்றுக்குட்டியுடன் பசுமாட்டின் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆவின் செல்லும் பிரதான பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலை விவசாயிகளை கவரும் வகையில் உள்ளது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, சேலம் - உருக்காலை பிரதான சாலையில் 17 அடி உயரத்தில் வைக்கப்பட்டுள்ள வீணை சிலை இசை ஆா்வலா்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. சேலம் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு அருகில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வட்டச் சாலையில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலை அப்பகுதியின் அடையாளமாக மாறியுள்ளது. வாழ்க்கைக்கு கல்வியும், மனதின் மகிழ்ச்சிக்கு இசையும் முக்கியம் என்பதை உணா்த்திடும் வகையில் புத்தகங்களுடன் கூடிய வீணை சிலையாக வைக்கப்பட்டுள்ளது.
சேலத்தின் புதிய அடையாளங்களாக மாறியுள்ள இந்தச் சிலைகள் பொதுமக்களின் கவனத்தை ஈா்த்து வருகின்றன.

