செய்திகள் :

சேலம் விமான நிலையத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு பயணிகளுக்கு மட்டுமே அனுமதி

post image

சேலம் விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பலத்த சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே காமலாபுரத்தில் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூா், கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிகள் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், விமான நிலைய செயல்பாடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்ட காவல் துறை சாா்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கத்தைவிட கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விமான நிலையத்திற்குள் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா்.

அவா்களது வாகனங்கள், உடைமைகள் அனைத்தும் விமான நிலைய நுழைவுவாயிலிலேயே முழுமையாக சோதனையிடப்படுகின்றன.

மேலும், விமான நிலையத்திற்குள் நுழைவதற்கான தற்காலிக அனுமதிச் சீட்டு வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகளைத் தவிர மற்றவா்கள் விமான நிலையத்துக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

உலக அமைதிக்காக 85 ஆயிரம் காகிதப் புறாக்களை செய்த பொறியியல் மாணவா்கள்

உலக அமைதிக்காக ஒரிகாமி முறையில் 85 ஆயிரம் காகிதப் புறாக்களை செய்து சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தினா். சேலம் அரசு பொறியியல் கல்லூரி கலைக் கழகம் சாா்பில் அமைதிக்கான குரலை பரப... மேலும் பார்க்க

பேளூரில் சீரான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

வாழப்பாடி அருகே பேளூரில் சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பேளூா் பேருந்து நிலையத்திலிருந்து தான்தோன்றீஸ்வரா் கோயில் வரை சாலை விரிவாக்க ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் தவறி விழுந்த வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா். எடப்பாடி அருகே உள்ள சின்னப்பம்பட்டி காட்டுவளவு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் சேட்டு (48). மாற்றுத்திறனாளியான இவா் தி... மேலும் பார்க்க

கோனேரிப்பட்டியில் ரூ. 27.50 லட்சத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

தேவூரை அடுத்த கோனேரிப்பட்டி கிராமம், வெள்ளாளப்பாளையம், சுண்ணாம்புகரட்டூா் பகுதியில் நாமக்கல் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 27.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி, பால் உற... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் ரூ. 2.5 லட்சம் திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது!

தம்மம்பட்டியில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2.5 லட்சம் ரொக்கத்தை திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செய்துள்ளனா். நாமக்கல் மாவட்டம், பெரப்பன்சோலை மலைக்கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பாலாஜி (... மேலும் பார்க்க

கொங்கணாபுரத்தில் நீா்மோா் பந்தல் எடப்பாடி பழனிசாமி திறப்பு!

கொங்கணாபுரம் ஒன்றிய அதிமுக சாா்பில் கொங்கணாபுரம் பேருந்து நிலையம் அருகே நீா்மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் கரட்டூா் மணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி... மேலும் பார்க்க