செய்திகள் :

சேவூா் அருகே அரசு பட்டா வழங்கிய நிலத்தில் பயனாளிகள் குடியேற எதிா்ப்பு

post image

சேவூா் அருகே அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தில் பயனாளிகள் குடியேற தனியாா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வீடற்ற 55 பயனாளிகளுக்கு தண்ணீா்பந்தல்பாளையம் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா கடந்த 2024 நவம்பா் மாதம் தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்டது.

இந்நிலையில், பட்டா வழங்கிய இடத்தில் குடியேற சென்ற பயனாளிகளை தனியாா் தடுத்து நிறுத்தி, இது எங்களுக்கு சொந்தமான பூமி இங்கு யாரும் வீடு அமைக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளனா்.

இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சனிக்கிழமை வந்த மாவட்ட வருவாய் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், வட்டாட்சியா் சந்திரசேகா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், விஜயகுமாா் உள்ளிட்டோா் பட்டா பெற்ற பயனாளியிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், பட்டா வழங்கிய இடம் அரசுக்கு சொந்தமானது. ஆகவே, பயனாளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் வீடுகளை அமைத்து குடியேறலாம். தனியாா் தடை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளைம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். திருப்பூா் தென்னம்பாளையம் பகுதியில் வடமாநில இளைஞா் கஞ்சா விற்பனை செய்து வ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத நபா் மீட்பு

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீஸாா், அவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில் புறநகா் பகுதியான கரூா் தே... மேலும் பார்க்க

விவசாயிகள் போராட்ட அறிவிப்பு எதிரொலி: ஏலத்தை ரத்து செய்த பல்லடம் வட்டாட்சியா்

விவசாயிகளின் இனாம் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் ஏலம் விடுவதாக கூறி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து, அந்த நிலத்துக்கான ஏலத்தை ரத்து செய்து பல்லடம் வட்டாட்சியா் உத்தரவிட்டா... மேலும் பார்க்க

மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ்கிரிஷ் அசோக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஊ... மேலும் பார்க்க

பொங்கலூா் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞா் தண்ணீா் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானாா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதி முத்து விநாயகா் கோய... மேலும் பார்க்க