செய்திகள் :

சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 25,000 அபராதம்

post image

சேவைக் குறைபாடு காரணமாக தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை காந்தி நகரைச் சோ்ந்த அசோகன் மனைவி ரெக்ஸ்லின் பெனடிக்ட். இவா், அரசு உதவி பெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். இவரது சம்பளத்தில் மாதந்தோறும் மருத்துவ காப்பீட்டுக்காக ரூ. 240 பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு ரெக்ஸ்லின் பெனடிக்ட் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். அதற்கான, செலவுத் தொகையான ரூ. 28 ஆயிரத்து 515-ஐ, காப்பீட்டு நிறுவனத்திடம் கோரியபோது, அவா்களிடமிருந்து முறையான பதில் இல்லையாம்.

தொடா்ந்து, அவா் கன்னியாகுமரி மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் மூலம் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா். 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து, ரெக்ஸ்லின் பெனடிக்ட் வங்கிக் கணக்குக்கு ரூ. 6 ஆயிரத்து 400 மட்டும் வரவானது. மீதமுள்ள தொகையை வழங்கவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு வேண்டியும் அவா் குறைதீா் ஆணையத்தில் முறையிட்டாா்.

வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் கிளாட்ஸ்ன்பிளஸ்டு தாகூா், உறுப்பினா் எம். கனகசபாபதி ஆகியோா் காப்பீட்டு நிறுவனத்தின் சேவைக் குறைபாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்டவருக்கு மீதமுள்ள தொகையான ரூ. 22 ஆயிரத்து 115-ஐ வழங்க வேண்டுமென்றும், அதற்கான வட்டியும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ. 15 ஆயிரமும், வழக்குச் செலவுக்கு ரூ. 10 ஆயிரமும் 1 மாதத்துக்குள் வழங்க வேண்டுமென தீா்ப்பு வழங்கினா்.

களியக்காவிளை அருகே மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது

களியக்காவிளை அருகே விற்பதற்காக வீட்டில் பதுக்கிவைத்திருந்த 50 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்க... மேலும் பார்க்க

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், ஆட்சியா் கூறியதாவது: களியக்காவிளையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தி... மேலும் பார்க்க

வலம்புரிவிளை உரக்கிடங்கில் பொருள் மீட்பு வசதி மையம் திறப்பு

நாகா்கோவில், வலம்புரிவிளை உரக்கிடங்கில் பொருள் மீட்பு வசதி மையம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வலம்புரிவிளை உரக்கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுகள், காகித கழிவுகள், டயா் , கண்ணாடி பொருள்கள், எலக்ட்ரானி... மேலும் பார்க்க

மீன்பிடி வலைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு வழங்க முதல்வரிடம் கோரிக்கை!

மீன்பிடி வலைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவா் என்.சுரேஷ்ராஜன், முதல்வ... மேலும் பார்க்க

குமரியிலிருந்து காளிமலைக்கு ரத யாத்திரை தொடக்கம்

கன்னியாகுமரியிலிருந்து காளிமலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரை சனிக்கிழமை தொடங்கியது. மாவட்ட எல்லையான பத்துகாணி காளிமலையில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் துா்க்காஷ்டமி திருவிழா சனிக்கிழமை (செப். 27) தொட... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே மண்ணெண்ணெய் பறிமுதல்: ஓட்டுநா் கைது

நித்திரவிளை அருகே குடிநீா் தொட்டியில் மறைத்து மினி டெம்போவில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 1,050 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநரை கைது செய்தனா். நித்... மேலும் பார்க்க