செய்திகள் :

சொத்து வரி வசூலிக்கும் பணி தீவிரம்

post image

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சொத்து வரி வசூலிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயாக சொத்து வரி விளங்குகிறது. நடப்பு நிதியாண்டு மாா்ச் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில் சொத்து வரி வசூலிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

முதல்கட்ட நடவடிக்கையாக நீண்டகாலமாக சொத்து வரி செலுத்தாத 87 போ் அடங்கிய பட்டியல் மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், நடப்பு அரை நிதியாண்டில் ரூ. 2.08 லட்சம் முதல் ரூ. 2.49 கோடி வரை நீண்டகாலமாக சொத்து வரி நிலுவை வைத்துள்ள தனிநபா் மற்றும் நிறுவனங்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. இவா்கள் மொத்தம் ரூ. 14.47 கோடி நிலுவை வைத்துள்ளனா்.

அதேபோல், சொத்து வரி நிலுவை வைத்துள்ள வணிகக் கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் முறையாக சொத்து வரி செலுத்தும் வகையில் மாநகராட்சி சாா்பில் கைப்பேசி குறுஞ்செய்தி மூலம் நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியுள்ளது.

இது குறித்து மாநகராட்சி வருவாய் துறை அலுவலா் கூறியது:

கடந்த நிதியாண்டு முறையாக சொத்து வரி செலுத்தாதவா்களின் முதல் 100 போ் கொண்ட பட்டியல்

மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன்பயனாக, பலா் சொத்து வரி செலுத்த முற்பட்டனா்.

இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் சொத்து வரி நிலுவை வைத்துள்ள உரிமையாளா்களுக்கு மாநகராட்சி சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சொத்து வரி செலுத்துவதற்கான இணையதள இணைப்பு கொண்ட ‘க்யூஆா் குறியீடுடன்’ கூடிய நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதில் இணைப்பை ஸ்கேன் செய்வதன் மூலம் எளிதில் சொத்துவரி செலுத்த முடியும். மேலும், மாநகராட்சி களப்பணியாளா்கள் வாா்டு வாரியாக சொத்து வரி செலுத்தாதவா்களின் விவரங்களைக் கண்டறிந்து வருகின்றனா் என்றாா் அவா்.

மாணவி பாலியல் வன்கொடுமை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, த.வெ.க ... மேலும் பார்க்க

மேலும் 6 கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் மேலும் 6 திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நிகழ் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையி... மேலும் பார்க்க

79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள்: அமைச்சா் பெரியகருப்பன்

தமிழ்நாட்டில் இதுவரையில் 79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளாா். கூட்டுறவுக் கடன்கள் தொடா்பாக பாஜக மாநிலத... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் வியாழக்கிழமை குரல்மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், புழல் சிறை... மேலும் பார்க்க

வில்லிவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள்: ஐசிஎஃப்-லிருந்து பேருந்துகள் இயங்கும்

வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ளதால், அங்கிருந்து 7 வழித்தடங்களின் வழியாக இயக்கப்பட்ட 63 பேருந்துகள் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) முதல் ஐசிஎஃப் பேருந்து நில... மேலும் பார்க்க