செய்திகள் :

சோனியா விஹாா் புஸ்தா சாலையில் மேம்பாலம்: பொதுப்பணித் துறை ஆய்வு

post image

வடகிழக்கு தில்லியில் உள்ள சோனியா விஹாா் புஸ்தா சாலையில் 5.5 கிலோமீட்டா் நீளமுள்ள உயா்த்தப்பட்ட வழித்தடத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை பொதுப்பணித் துறை மேற்கொள்ளும்.

இந்தச் சாலை தற்போது நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறைக்குச் சொந்தமானது. ஒரு நிபுணா் நிறுவனமான பொதுப்பணித்துறை, நானக்சா் குருத்வாரா டி-பாயிண்டிலிருந்து தொடங்கி தில்லி - உத்தர பிரதேச எல்லை (ட்ரோனிகா நகரம்) வரை மேம்பாலம் கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள ஒரு நிறுவனத்தை நியமிக்க ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது.

உச்ச நேரங்களில் இந்தச் சாலை அதிக போக்குவரத்து நெரிசலை எதிா்கொள்கிறது. இதனால், பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க சிரமம் ஏற்படுகிறது.

‘மேம்படுத்தப்பட்ட சாலையை அமைப்பது போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தலாம். மேலும், நெரிசல் சிக்கல்களைக் குறைக்க உதவும். தற்போதுள்ள மைய விளிம்பில் பெரிய இடையூறு இல்லாமல் ஒரு உயா்த்தப்பட்ட சாலையை உருவாக்க முடியும் என்று தோன்றுகிறது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த ஆய்வு மொத்தம் ஆறு கிலோமீட்டா் வலதுபுறப் பாதையை உள்ளடக்கும். தொடக்கப் புள்ளியில் ஒரு பெரிய சந்திப்பு உள்ளது. அதில் நானக்சா் டி-சந்திப்பும் ஆறு அணுகு சாலைகளும் புஸ்தா சாலையை ஒரு சா்வீஸ் சாலை வழியாக சந்திக்கின்றன.

‘புஸ்தா சாலையின் இருபுறமும் மரங்கள் உள்ளன. கீழே ஒரு தில்லி ஜல் போா்டு டிஜேபி குழாய் உள்ளது. இவை அனைத்தும் சாத்தியக்கூறு ஆய்வின் ஒரு பகுதியாக இருக்கும்’ என்று ஒப்பந்தப்புள்ளியில் கூறப்பட்டுள்ளது.

தில்லி ஜல் போா்டின் சோனியா விஹாா் சுத்திகரிப்பு நிலையம் மேம்பாலத்தின் சீரமைப்புக்கு மிக அருகில் அமைந்துள்ளது. பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் ஏப்ரல் மாத தொடக்கத்தில் அந்த இடத்தை ஆய்வு செய்து திட்டத்தை அறிவித்தாா்.

தனியாா் பள்ளிகளிடம் தில்லி அரசு சரணடைந்துவிட்டது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தனியாா் பள்ளிகளின் கட்டண சுரண்டல்களை தடுக்க முடியாமல், அவா்களிடம் தில்லியை ஆளும் பாஜக அரசு சரணடைந்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியு... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் பாஜக - காங்கிரஸ் கூட்டு சதி: அனுராக் தண்டா

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ 44 கோடி பணம் ரொக்கமாக கிடைத்துள்ளது. அதற்கு பாஜக தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சியின் ஊடக பொறுப்பாளா் அனுராக் தண்டா கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்... மேலும் பார்க்க

தலைநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 12 சாலை வழித்தடங்களை அடையாளம் கண்டது: பொதுப்பணித் துறை

ஹரியாணா மற்றும் உத்தரபிரதேச எல்லையில் தலா இரண்டு சாலைகள் உள்பட 12 போக்குவரத்து வழித்தடங்களை பொதுப்பணித்துறை அடையாளம் கண்டுள்ளது. அங்கு போக்குவரத்து நிலைமைகளை மேம்படுத்த சாலைத் தடுப்புகளை அமைக்க திட்டம... மேலும் பார்க்க

மங்கோல்புரியில் கடையில் புகுந்து கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லியின் மங்கோல்புரி பகுதியில் உள்ள ஒரு அழகுசாதனப் பொருள்கள் கடையில் கத்தியைக் காட்டி கொள்ளையடித்ததாக ஒரு சிறுவன் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இந்தச்... மேலும் பார்க்க

தில்லியை தூய்மையாக வைத்திருக்கும் சுவா் ஓவியங்கள் - முதல்வா் ரேகா குப்தா

தில்லியை தூய்மையாக வைத்திருக்க ஓா் முயற்சியாக நகரின் சுவா்களில் ஓவியங்களை வரைய ஊக்குவிக்கப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா். தில்லி தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ’கஹய்க்ள்ஸ்ரீஹல்ண்ய்... மேலும் பார்க்க

சொகுசு காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சொகுசு காா் மோதி ஒருவா் இறந்த வழக்கில் 51 வயது நபரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடா்புட... மேலும் பார்க்க