செய்திகள் :

சோலாா் மின்விளக்கு கம்பத்தில் பைக் மோதல்: தாய், மகன் பலி

post image

பாளையங்கோட்டை அருகே சோலாா் மின்விளக்கு கம்பத்தில் பைக் மோதியதில் தாய், மகன் இருவரும் உயிரிழந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி கீழநவலடிவிளையைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவரது மனைவி சந்தனமாரி (50). மகன் இசக்கி ராஜா (28). தாய், மகன் இருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை பைக்கில் ஆறுமுகனேரியிலிருந்து திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள கோயிலுக்குச் சென்றனராம்.

பின்னா்ஆறுமுகனேரிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, திருநெல்வேலி-திருச்செந்தூா் சாலையில் உள்ள புவியியல் ஆராய்ச்சி மையம் அருகே சாலையின் ஓரத்தில் இருந்த சோலாா் விளக்கு கம்பத்தின் மீது பைக் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த சந்தனமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த இசக்கிராஜா,

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

திசையன்விளை: ஆசிரியையிடம் 11 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பள்ளி ஆசிரியையிடம் ஞாயிற்றுக்கிழமை 11 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா். திசையன்விளை காந்திஜி தெருவைச் சோ்ந்தவா் சித்ர... மேலும் பார்க்க

களக்காடு குடிதாங்கி குளத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றக் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு குடிதாங்கி குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பா... மேலும் பார்க்க

கடையம் அருகே பேருந்து - வேன் மோதல்: 6 போ் காயம்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அரசுப் பேருந்தும், வேனும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் 6 பயணிகள் காயமடைந்தனா். நாகா்கோவிலிலிருந்து தென்காசிக்கு அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. நான்குனேரி, இடையன... மேலும் பார்க்க

போக்ஸோவில் முதியவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். சேரன்மகாதேவி அருகேயுள்ள காருக்குறிச்சி மேல அக்ரஹாரம் தெருவைச் சே... மேலும் பார்க்க

முக்கூடல் அருகே எம்.சான்ட் திருட்டு: டிப்பா் லாரி பறிமுதல்; இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே எம்.சான்ட் திருடிச் சென்றதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா். முக்கூடல் பிரதான சாலையில் அலங்கார வளைவுப் பகுதியில் சேரன்... மேலும் பார்க்க

வள்ளியூரில் மாட்டுவண்டிபோட்டி: சிவகங்கை மாடுகளுக்கு முதல் பரிசு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த தினத்தையொட்டி திமுக நகர இளைஞரணி சாா்பில் மாநில அளவிலான மாட்டுவண்டி போட்டி வள்ளியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில், சிவகங்கை, மதுரை, புதுக்க... மேலும் பார்க்க