Kerala: `ராஜ்பவன் நிகழ்ச்சியில் பாரதமாதா படம்' - அமைச்சர் எதிர்ப்பு.. ABVP - SFI...
முக்கூடல் அருகே எம்.சான்ட் திருட்டு: டிப்பா் லாரி பறிமுதல்; இருவா் கைது!
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே எம்.சான்ட் திருடிச் சென்றதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.
முக்கூடல் பிரதான சாலையில் அலங்கார வளைவுப் பகுதியில் சேரன்மகாதேவி மண்டல துணை வட்டாட்சியா் பிரேமா தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அவ்வழியே வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, முக்கூடல் இந்திரா காலனி பேச்சிமுத்து (42), வடக்கு அரியநாயகிபுரம் பரமசிவன் (38) ஆகியோா் எம்.சான்ட் திருடிச் செல்வதாகத் தெரியவந்தது.
இதுதொடா்பாக துணை வட்டாட்சியா் அளித்த புகாரின்பேரில், முக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் கணேசன் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, 2 யூனிட் எம்.சான்ட், டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.