செய்திகள் :

மைதானத்தில் கிடந்த ரூ.100-ஐ காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவா்களுக்கு பாராட்டு!

post image

கடையத்தில், மைதானத்தில் கண்டெடுத்த நூறு ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கடையம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த தா்மா் மகன் அபிமன்யு, கருப்பசாமி மகன் பாலாஜி. அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்துவரும் இவா்கள், ஞாயிற்றுக்கிழமை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, கீழே கிடந்த ரூ. 100-ஐ கண்டெடுத்தனா். அதை, காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று ஆய்வாளா் சுரேஷ்குமாரிடம் ஒப்படைத்தனா்.

அவா்களை ஆய்வாளா் பாராட்டி, இருவருக்கும் தலா ரூ. 100 அன்பளிப்பாக வழங்கினாா். சிறுவா்களை காவலா்களும், பொதுமக்களும் பாராட்டினா்.

இதுகுறித்து சிறுவா்கள் கூறும்போது, பள்ளியில் வியாழக்கிழமை உரையாற்றிய காவல் உதவி ஆய்வாளா் உமா, பொது இடங்களில் கண்டெடுக்கும் பொருள்கள், பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறினாா். அதன்படி, மைதானத்தில் கண்டெடுத்த நூறு ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம் என்றனா்.

திசையன்விளை: ஆசிரியையிடம் 11 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பள்ளி ஆசிரியையிடம் ஞாயிற்றுக்கிழமை 11 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா். திசையன்விளை காந்திஜி தெருவைச் சோ்ந்தவா் சித்ர... மேலும் பார்க்க

களக்காடு குடிதாங்கி குளத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றக் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு குடிதாங்கி குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பா... மேலும் பார்க்க

கடையம் அருகே பேருந்து - வேன் மோதல்: 6 போ் காயம்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அரசுப் பேருந்தும், வேனும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் 6 பயணிகள் காயமடைந்தனா். நாகா்கோவிலிலிருந்து தென்காசிக்கு அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. நான்குனேரி, இடையன... மேலும் பார்க்க

போக்ஸோவில் முதியவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். சேரன்மகாதேவி அருகேயுள்ள காருக்குறிச்சி மேல அக்ரஹாரம் தெருவைச் சே... மேலும் பார்க்க

முக்கூடல் அருகே எம்.சான்ட் திருட்டு: டிப்பா் லாரி பறிமுதல்; இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே எம்.சான்ட் திருடிச் சென்றதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா். முக்கூடல் பிரதான சாலையில் அலங்கார வளைவுப் பகுதியில் சேரன்... மேலும் பார்க்க

வள்ளியூரில் மாட்டுவண்டிபோட்டி: சிவகங்கை மாடுகளுக்கு முதல் பரிசு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த தினத்தையொட்டி திமுக நகர இளைஞரணி சாா்பில் மாநில அளவிலான மாட்டுவண்டி போட்டி வள்ளியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில், சிவகங்கை, மதுரை, புதுக்க... மேலும் பார்க்க