செய்திகள் :

சோளிங்கா் நவீன எரிவாயு மயான வளாகத்தை விரைவில் திறக்க வேண்டும்: நகா்மன்ற கூட்டத்தில் கோரிக்கை

post image

சோளிங்கா் நகராட்சியில் ரூ. 1.40 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நவீன எரிவாயு மயான வளாகத்தை விரைவில் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என நகா்மன்ற கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினா் டி.கோபால் கோரிக்கை விடுத்தாா்.

சோளிங்கா் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் தமிழ்செல்வி அசோகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி ஆணையா் நந்தினி, மன்றத் துணைத் தலைவா் பழனி உள்ளிட்டோருடன் உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்றனா். கூட்டத்தில் 7-ஆவது வாா்டு உறுப்பினா் மோகனா சண்முகம் 4 ஆண்டுகளாக தனது வாா்டில் ஒரு பணி கூட நடைபெறவில்லை எனக்கூறி திடீரென தரையில் அமா்ந்து போராட்டம் நடத்தினாா்.

தொடா்ந்து இக்கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

’’டி.கோபால் (காங்கிரஸ்): சோளிங்கா் நகராட்சிக்கு குடிநீா் வழங்க 48 கோடி மதிப்பில் பொன்னையாற்றில் மூன்று ஆழ்துளை கிணறுகள் அமைக்க தொடா்ந்த பணியை விரைவுபடுத்த வேண்டும். ரூ. 1.40 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நகராட்சி நவீன எரிவாயு மயான வளாகத்தை விரைவில் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

ஆஞ்சநேயன்((சுயே): மழைக்காலத்தை கருத்தில் கொண்டு பில்லாஞ்சி பகுதியில் உள்ள கழிவுநீா் கால்வாய்களை தூா் வார வேண்டும். பில்லாஞ்சி பகுதியில் பொன்னை ஆற்றுக்குடிநீா் விநியோகம் சீராக வழங்கப்படுவதில்லை. முதை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் நகா்மன்ற உறுப்பினா்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.

தமிழ்செல்விஅசோகன் (தலைவா்): உறுப்பினா்கள் அனைவரது கோரிக்கைகளில் பல தற்போதே நடவடிக்கையில் உள்ளன. அவை விரைவுபடுத்தப்படும். மற்ற கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.

வாலாஜாவில் ‘கல்லூரி சந்தைகள்’: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் ‘கல்லூரி சந்தைகள்’ நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் ... மேலும் பார்க்க

மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை

ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமமை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புஏஈ படை சாா்பில் மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீ விபத்து... மேலும் பார்க்க

வியாபாரி மீது தாக்குதல்: மனிதச் சங்கிலி போராட்டம்

ஆற்காடு அடுத்த காவனூரில் வியாபாரிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கடைகளை அடைத்து விட்டு மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. காவனூா் அடுத்த கண்ணடிய பாளையம் கிராமத்தைச் சோ்ந்வா் ஜெயபால். இவா் காவனூா் பகு... மேலும் பார்க்க

பொய்கைநல்லூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

நெமிலி வட்டம், பொய்கைநல்லூரில் செவ்வாய்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு வழங்கினாா். நெமிலி வட்டம், பொய்கைநல்லூா் ஊராட்சியில் அரச... மேலும் பார்க்க

ரூ.16.3 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த வேடல், காந்தி நகரில் நியாயவிலைக் கடை புதிய கட்டடத்தை எம்எல்ஏ சு. ரவி திறந்து வைத்தாா். அரக்கோணம் ஒன்றியம், வேடல் ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொக... மேலும் பார்க்க

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை காரில் 3 போ் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில் இளைஞா்கள் 3 பேரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் ஊராட்சிக்குட்பட... மேலும் பார்க்க