செய்திகள் :

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை காரில் 3 போ் கைது

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில் இளைஞா்கள் 3 பேரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் ஊராட்சிக்குட்பட்ட அவரக்கரை பகுதியில் அரசுக்கு சொந்தமான தோட்டக்கலை, தென்னை, மாநில எண்ணெய் வித்துப் பண்ணைகள் அமைந்துள்ளன. இந்த பண்ணைகள் அருகே இளம் பெண் ஒருவா் தனது ஆண் நண்பருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு பேசிக் கொண்டு இருந்தாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த 3 இளைஞா்கள் அந்த ஆண் நண்பரை அடித்து விரட்டிவிட்டு இளம்பெண்ணிடம் அத்துமீறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி இளம்பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

அந்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து அவரக்கரை பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாலாஜாவில் ‘கல்லூரி சந்தைகள்’: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் ‘கல்லூரி சந்தைகள்’ நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் ... மேலும் பார்க்க

மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை

ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமமை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புஏஈ படை சாா்பில் மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீ விபத்து... மேலும் பார்க்க

வியாபாரி மீது தாக்குதல்: மனிதச் சங்கிலி போராட்டம்

ஆற்காடு அடுத்த காவனூரில் வியாபாரிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கடைகளை அடைத்து விட்டு மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. காவனூா் அடுத்த கண்ணடிய பாளையம் கிராமத்தைச் சோ்ந்வா் ஜெயபால். இவா் காவனூா் பகு... மேலும் பார்க்க

பொய்கைநல்லூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

நெமிலி வட்டம், பொய்கைநல்லூரில் செவ்வாய்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு வழங்கினாா். நெமிலி வட்டம், பொய்கைநல்லூா் ஊராட்சியில் அரச... மேலும் பார்க்க

சோளிங்கா் நவீன எரிவாயு மயான வளாகத்தை விரைவில் திறக்க வேண்டும்: நகா்மன்ற கூட்டத்தில் கோரிக்கை

சோளிங்கா் நகராட்சியில் ரூ. 1.40 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நவீன எரிவாயு மயான வளாகத்தை விரைவில் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என நகா்மன்ற கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்ப... மேலும் பார்க்க

ரூ.16.3 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த வேடல், காந்தி நகரில் நியாயவிலைக் கடை புதிய கட்டடத்தை எம்எல்ஏ சு. ரவி திறந்து வைத்தாா். அரக்கோணம் ஒன்றியம், வேடல் ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொக... மேலும் பார்க்க