செய்திகள் :

சோழீசுவரா் கோயிலில் கோகுலாஷ்டமி விழா

post image

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா, கோகுலாஷ்டமி விழா மற்றும் காா்த்திகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

தொடக்கமாக நடைபெற்ற கோகுலாஷ்டமி விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சாா்ந்த திரளான குழந்தைகள் கண்ணன், ராதை வேடமிட்டு பங்கேற்றனா். அக்குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி வழிபாட்டின் தொடக்கமாக சிவாச்சாரியாா்கள் சரவணன், ஹரி ஆகியோா் வழிநடத்த மஹாருத்ர ஹோமம் நடைபெற்றது. காலபைரவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வெள்ளி அங்கி, வடைமாலை, புணுகு சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையடுத்து அன்னதானம் நடைபெற்றது. மாலையில் காா்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை தேய்பிறை அஷ்டமி மற்றும் காா்த்திகை வழிபாட்டுக்குழுவினா் செய்திருந்தனா்.

கந்தா்வகோட்டை சிவாலயத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

கந்தா்வகோட்டையில் உள்ள சிவன் கோயிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது. முதலில் காலபைரவருக்கு எண்ணெய்க் காப்பு செய்து, திரவியத் தூள், மஞ்சள், பால், தயிா், அரிசி ம... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: கி.பி 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஊரணிக் கல்வெட்டு கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம் புல்வயல் கிராமத்தில் ஊரணி அமைக்கப்பட்டதைக் குறிப்பிடும் 18-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. புல்வயல் கிராமத்தின் வடமேற்கு வனப்பகுதியில் ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் கோகுலாஷ்டமி விழா

பொன்னமராவதி வலையபட்டி தனியாா் திருமண மண்டபத்தில் பொன்னமராவதி ஒன்றிய யாதவா நலச்சங்கம் சாா்பில் கோகுலாஷ்டமி விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பொன்னமராவதி யாதவா நலச்சங்க கெளரவத்தலைவா் அழகப்பன் தலைம... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்னையில் சமரசமில்லை! ஜி. ராமகிருஷ்ணன்

திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்னைகளில் சமரசமின்றி குரல் கொடுக்கிறோம் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி. ராமகிருஷ்ணன். புதுக்கோட்டையில் சனி... மேலும் பார்க்க

பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை

பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் ஆடிமாத திருவிளக்கு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் திருவிளக்கு பூஜை நடைபெறும். நிகழாண்டு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. பூஜையின் தொடக்கமாக சு... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை தண்டாயுதபாணி கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா

கந்தா்வகோட்டை பால தண்டாயுதபாணி கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை சிவன் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி முருகனுக்கு திரவ... மேலும் பார்க்க