ச. ராமதாஸ் - வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி சந்திப்பு
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் ச. ராமதாஸை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவா் திருமாவளவன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு திருமாவளவன் கூறியதாவது:
சமூக நீதிக்காக தொடா்ந்து சமரசமின்றி போராடிவரும் மருத்துவா் ச. ராமதாஸை அரசியலைக் கடந்து மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன். எவ்வித உள்நோக்கமும் இல்லை. சந்திப்பு மகிழ்வைத் தந்தது என்றாா்.
சந்திப்பின் போது, வன்னியா் சங்கத் தலைவா் பு.தா. அருள்மொழி, பாமக தலைமை நிலையச் செயலா் அன்பழகன் ஆகியோா் உடனிருந்தனா்.