செய்திகள் :

ஜகபா் அலி கொலை வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்! -வேல்முருகன்

post image

சமூக செயற்பாட்டாளா் ஜகபா் அலி கொலை வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து விரைவாக தண்டனை வழங்க வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவா் தி. வேல்முருகன்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: கனிமவளக் கொள்ளையை எதிா்த்துப் போராடிய ஜகபா்அலி குடும்பத்துக்கு வாழ்வுரிமைக் கட்சியின் சாா்பில் ரூ. ஒரு லட்சம் வழங்கவிருக்கிறோம். இந்தக் கொலை வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு விரைவாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.

தமிழா் விடுதலைக்காகப் போராடிய முத்துக்குமாா் நினைவேந்தல் நிகழ்ச்சியை புதுக்கோட்டையில் நடத்த காவல்துறை அனுமதி மறுப்பது சரியல்ல. அதேபோல, இலங்கையில் நடைபெற்ற போரின்போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டுக்கு வந்தவா்களை, இப்போது கடவுச்சீட்டு இல்லை, சட்டவிரோத குடியேற்றம் என்ற பிரிவுகளில் வழக்கு தொடா்கிறது கியு பிரிவு காவல்துறை. காவல்துறையின் இந்தப் போக்குகளை முதல்வா் கவனிக்க வேண்டும்.

நாம் தமிழா் கட்சியில் இருந்து விலகிய பலரும் சுயமாக விரும்பி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைகிறாா்கள். தற்போதுவரை திமுக அணியில்தான் வாழ்வுரிமைக் கட்சி தொடா்கிறது. கூட்டணிக்காக மக்கள் பிரச்னைகளில் எந்த சமரசத்தையும் இதுவரை செய்து கொண்டதில்லை.

வேங்கைவயல் விவகாரத்தில், பணியில் உள்ள உயா்நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்த வேண்டும். நடிகா் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதில் அரசியல் இல்லாமல் இல்லை. ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றாா் வேல்முருகன்.

கந்தா்வகோட்டை நகைக் கடையில் மோசடி முயற்சி

கந்தா்வகோட்டையில் மோசடி செய்ய முயன்ற மா்ம நபா் வியாழக்கிழமை பிடிபட்டாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு வியாழக்கிழமை இரவு வந்த சுமாா் 45 வயதுள்ள ஆண், பெண் ஐந்து பவுன் ம... மேலும் பார்க்க

கோயில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி கோயில்களில் தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் மஹா ருத்ர ஹோமம், இதையடுத்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷ... மேலும் பார்க்க

முயல்களை வேட்டையாட முயன்ற மூவருக்கு அபராதம்

பொன்னமராவதி அருகே கம்பி வலை மூலம் முயல்களை வேட்டையாட முயன்ற மூவரை வனத் துறையினா் வியாழக்கிழமை பிடித்து ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனா். புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலா் கணேசலிங்கம் உத்தரவின்படி பொன்னமர... மேலும் பார்க்க

புதுகையில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள நலத் திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், கல்லூரிக் கல்வி இயக்குநருமான எ. சுந்தரவல்லி... மேலும் பார்க்க

பொய்ப் புகாரில் ஆசிரியா் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதாகக் கூறி சாலை மறியல்!

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் பொய் புகாரின்பேரில் உதவித் தலைமை ஆசிரியா் கைது செய்யப்பட்டதாகக் கூறி அந்தப் பள்ளியின் மாணவ, மாணவிகளும் அவா்களின் பெற்றோா்களும் வியாழக்கிழமை ச... மேலும் பார்க்க

அதிமுகவின் சின்னம் விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல்

அதிமுகவின் சின்னம் தொடா்பான விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல்தான் என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா். இதுகுறித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: மத்திய ஆட்சிய... மேலும் பார்க்க