செய்திகள் :

ஜனநாயகத்தின் பாதுகாவலர்! பிகாரில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு!

post image

பிகாரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் வாக்குரிமை பேரணிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

பிகார் மாநிலம், ரோத்தாஸ் மாவட்டம், சசாரம் நகரில் ராகுல் காந்தி தலைமையில், வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணம் நேற்று தொடங்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இந்த பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, ஒளரங்காபாத்துக்கு பேரணி வந்தடைந்தது. தேவ் சூரிய மந்திரில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தரிசனம் செய்த பின்னர், இரண்டாம் நாள் பேரணியைத் தொடங்கினர்.

இந்த நிலையில், சாலையின் இருபுறங்களில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் மக்களும் நின்று ராகுல் காந்திக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அந்த காணொலியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த கேரள காங்கிரஸ், “ஜனநாயகத்தின் பாதுகாவலர் முன்னேறுகிறார். பாஜக என்ற விஷத்தை சுத்தம் செய்யும் வரை அவர் ஓய மாட்டார்.” எனக் குறிப்பிட்டுள்ளது.

நடைப்பயணமாகவும், வாகனப் பயணமாகவும் 16 நாள்கள் 1,300 கி.மீ. தொலைவைக் கடந்து 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த பேரணி, செப்டம்பா் 1-ஆம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைய உள்ளது.

Rahul Gandhi reaches Bihar's Aurangabad for second day of Voter Adhikar Yatra

இதையும் படிக்க : இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா?

இந்தியாவில் சீன வெளியுறவு அமைச்சர்! வலுவடையும் இருநாட்டு உறவு!

இரு நாள் சுற்றுப்பயணமாக சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி திங்கள்கிழமை மாலை தில்லி வந்தடைந்தார்.மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தில்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று அவரை வரவேற்ற நிலை... மேலும் பார்க்க

டிரம்ப்புடன் பேசியது என்ன? பிரதமர் மோடியுடன் பகிர்ந்த ரஷிய அதிபர்!

பிரதமர் நரேந்திர மோடியை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசியில் தொடர்புகொண்டு இன்று (ஆக. 18) பேசினார். இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கடந்த வாரம் நடத்திய ஆலோசனையின் மதிப்பீடுகள் குறித... மேலும் பார்க்க

‘பாஜக கைகளில் இருக்கும் பொம்மை’: தேர்தல் ஆணையம் மீது மஹுவா மொய்த்ரா எம்.பி. சாடல்!

தேர்தல் ஆணையமே ‘பாஜகவின் கைகளில் இருக்கும் பாவை போலச் செயல்படுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்று மக்களவை எம்.பி. மஹுவா மொய்த்ரா விமர்சித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் ஆணையத்தை விமர்சித... மேலும் பார்க்க

எதிர்க்கட்சியினர் - குரங்குகள்? மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சனத்தால் சர்ச்சை!

கேரளத்தில் வாக்கு முறைகேடு குறித்த கேள்விக்கு எதிர்க்கட்சியினரை குரங்குகள் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.கேரள மாநிலத்தின் திரிசூரில் உள்ள சக்தன் தம்புரான் ச... மேலும் பார்க்க

மும்பையில் மழை வெள்ளத்தில் தத்தளித்த பள்ளி வேன்: குழந்தைகளைப் பத்திரமாக கரைசேர்த்த போலீஸாருக்கு பாராட்டு!

மும்பை: மும்பையில் பள்ளி வேனிலிருந்த குழந்தைகள் சிலர் மழை வெள்ளத்தில் தத்தளித்த நிலையில், அந்தக் குழந்தைகளை போலீஸார் பத்திரமாக கரை சேர்த்த காணொலி சமூக ஊடகங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.வானிலை மையத்தின... மேலும் பார்க்க

டிரம்மில் அழுகிய உடல்: மனைவி, குழந்தைகள் மாயம்; நடந்தது என்ன?

ராஜஸ்தானில் அல்வாரில் டிரம்மில் அழுகிய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் திஜாரா மாவட்டத்தில் உள்ள ஆதர்ஷ் காலனியில் நடைபெற்றது. வீட்டு உரிமையாளர், அவரின் மகள் ஏதோ வே... மேலும் பார்க்க