செய்திகள் :

ஜம்முவில் தீவிரவாதிகள் - பாதுகாப்புப் படையினருக்கு மீண்டும் துப்பாக்கிச் சூடு!

post image

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படை வீரர்கள் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

கதுவா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் கடந்த நான்கு நாள்களாக தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் இன்று (மார்ச் 27) காலை சூஃபியான் வனப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் இருதரப்புக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹிராநகர் பகுதியைச் சேர்ந்த சன்யல் கிராமத்தில் கடந்த மார்ச் 23 அன்று தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் நடவடிக்கையைத் துவங்கினர். அப்போது, இருதரப்புக்கும் இடையில் முதல்முறையாக துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

பின்னர், தீவிரவாதிகளைக் கண்டறிய வீரர்களின் உத்தேச துப்பாக்கிச் சூடுகளுக்கு எந்தவொரு பதில் தாக்குதலும் வராததினால் தேடுதல் நடவடிக்கையானது விரிவடைந்தது.

மேலும், இந்தத் தேடுதல் நடவடிக்கையில் இந்திய ராணுவம், தேசிய பாதுகாப்புப் படை, எல்லை பாதுகாப்புப் படை, ஜம்மு காவல் துறை, சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் ஆகிய படைகள் இணைந்து ஹெலிகாப்டர், டிரோன், துப்பாக்கிக் குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் மோப்ப நாய்கள் ஆகியவற்றின் உதவியுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 25 அன்று ராணுவ சீருடையில் இருந்த நபர்கள் தன்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு சம்பா - கதுவா பகுதியிலுள்ள ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்பட்ட நபர்களிடம் பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் கடந்த மார்ச் 25 அன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 2 கையெறி குண்டுகள் மற்றும் மிகப் பெரியளவிலான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த ராணுவ நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினருடன் அப்பகுதிவாசிகளும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும், சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தி, தீவிரவாதிகளின் நடமாட்டம் ஏதேனும் உணரப்பட்டால் உடனடியாக தகவல் அளிக்குமாறு பாதுகாப்புப் படை வீரர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த மார்ச் 5 அன்று மர்ஹூன் கிராமத்தில் உறவினரின் திருமணத்துக்கு சென்று திரும்பிய தர்ஷன் சிங் (வயது 40), யோகேஷ் சிங் (32) மற்றும் வருண் சிங் (14) ஆகியோர் மாயமாகிய நிலையில் ராணுவம் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையில் மார்ச் 8 அன்று அங்குள்ள வனப்பகுதியிலுள்ள நீர்வீழ்ச்சியின் அருகே மூவரின் சடலமும் மீட்கப்பட்டன.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜித்தேந்திரா சிங் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், கதுவாவில் தீவிரவாதிகளினால் மூன்று உறவினர்கள் கொல்லப்பட்டது மிகுந்த வருத்தமளிப்பதாகப் பதிவிட்டிருந்தார்.

மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சர்வதேச எல்லையில் அமைந்துள்ள கதுவா மாவட்டத்தின் வழியாக கடந்த காலங்களில் தீவிரவாதிகள் இந்தியாவினுள் ஊடுருவியது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் நடுவே மயங்கிய முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மரணம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் போட்டியின் நடுவே மயங்கி விழுந்த நைஜீரிய குத்துச்சண்டை வீரர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நைஜீரியா நாட்டைச் சேர்ந்த முன்னாள் தேசிய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க குத்துச்சண்டை ச... மேலும் பார்க்க

எல்லையைக் கடந்து பரவும் தொற்றினால் 10 லட்சம் பேருக்கு ஆபத்து! காப்பாற்றுமா அரசின் திட்டம்!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் வேகமாகப் பரவி வரும் காலரா நோயினால் சுமார் 10 லட்சம் பேர் அபாயத்திலுள்ளதாகக் கூறப்படுகின்றது.தெற்கு சூடான் நாட்டுடனான எல்லையில் எத்தியோபியாவின் தென் மேற்கிலுள... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து டி20-யிலும் சிறப்பாக செயல்பட விரும்பும் ஆப்கன் வீரர்!

டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட விரும்புவதாக ஆப்கானிஸ்தான் அணியின் பிரபல ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான அஸ்மதுல்லா ஓமர்ஸாய், கடந்... மேலும் பார்க்க

விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் உரிமைத் தொகை! - தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் விடுபட்டோருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்திற்குள்பட்ட வெற்றிலைமுருகன்பட்டி, ... மேலும் பார்க்க

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க