செய்திகள் :

ஜம்மு: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

post image

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் எல்லை மாவட்டங்களான பூஞ்ச், ரஜெளரி, உதம்பூா்-கதுவா உயா் மலைப் பகுதிகள், டோடா, கிஷ்த்வாா் மலைப் பகுதிகள், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியையொட்டிய வனப் பகுதிகள் எனப் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் பணியில் பதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஈடுபட்டனா்.

இதில், ரியாசி மாவட்டம் மஹோரே பகுதியில் அமைந்துள்ள வனப் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தைக் கண்டறிந்த பாதுகாப்புப் படையினா், அங்கிருந்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் 4 கருவிகள், ஏகே ரக துப்பாக்கி தோட்டா தொகுப்புகள், வெடிமருந்துகள் ஆகியவற்றைக் கைப்பற்றினா். ஆனால், பயங்கரவாதிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றனா்.

ஆய்வுக் கூட்டம்: இதனிடையே, ஜம்மு பாதுகாப்புப் படை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் நவீன் சச்தேவா தலைமையில் பன்முக பாதுகாப்புப் படையினரின் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஜம்மு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், பயங்கரவாத முயற்சிகளை முறியடிக்கும் நோக்கிலும் நடைபெற்ற இந்தக் கூட்டு பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் புலனாய்வு அமைப்புகள், ஜம்மு-காஷ்மீா் போலீஸ், மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) ஆகிய பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்’ என்றனா்.

தில்லி எதிர்க்கட்சி தலைவராக அதிஷி நியமனம்

தில்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் தலைவருமான அதிஷி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்எ... மேலும் பார்க்க

ஹிமாசலில் நிலநடுக்கம்!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.42 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.7ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுந்தர்நகர்... மேலும் பார்க்க

கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைந்த பிரபல நடிகை!

அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் பஞ்சாபி நடிகை சோனியா மான் ஆம் ஆத்மியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார். அவரை வரவேற்று ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "கிர்த்தி கிசான் அமைப்பு... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்கத்தில் சிக்கியவர்களை நெருங்கிய மீட்புக் குழு!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததையடுத்து, சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்கியுள்ளதாக ... மேலும் பார்க்க

பெண்களின் சக்தி நாட்டை வலுப்படுத்தும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் மோடி நாட்டு மக்களுக... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ராகுல் காந்தி பேச்சு

தெலங்கானா சுரங்க விபத்து தொடா்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் கேட்டறிந்தாா். தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்பு நடவடிக்கையி... மேலும் பார்க்க