செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு அச்சுறுத்தல்: 22 குடும்பங்கள் வேறு இடத்துக்கு மாற்றம்!

post image

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள 22 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புகழ்பெற்ற மச்சைல் மாதா ஆலயத்தை இணைக்கும் கிஷ்த்வார்-பத்தார் சாலையில் இன்று மூன்றாவது நாளாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுு.

இதுதொடர்பாக மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜேஷ் குமார் ஷவான் கூறுகையில்,

கிஷ்த்வார்-பெத்தார் சாலையில் பதர்னகியின் சிங்ரா நல்லாவில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதியை ஆய்வு செய்து, நிலச்சரிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை மதிப்பிடுவதிலும், தற்போது நடவடிக்கைகளை மதிப்பிடுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றது.

தொடர்ச்சியான மண்சரிவு மற்றும் நிலச்ச்ரிவு அச்சுறுத்தல் காரணமாக மக்களின் பாதுகாப்பிற்காக சில தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோர். மலையடிவார கிராமத்தில் உள்ள சுமார் 22 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களுக்குத் தேவையான பொருள்கள், தங்குமிடம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை எந்தவொரு வீடுகளிலும் விரிசல்கள் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதியில் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், சாலையின் 200 மீட்டருக்கும் அதிகமான பகுதி மண்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளதாகவும், மலையிலிருந்து தொடர்ந்து உருண்ட கற்கள் சாலை அகற்றும் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தலித் இளைஞர் மீது சிறுநீர் கழித்துத் தாக்கிய இருவர் மீது வழக்கு!

ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது இருவர் சிறுநீர் கழித்துத் தாக்கி துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஊர்வலத்தைப் பார்த்ததற்காக, மாற்று சமூகத்தைச் சே... மேலும் பார்க்க

பெங்களூரில் காவல்துறை முன்னாள் டிஜிபி படுகொலை! என்ன நடந்தது?

பெங்களூரு: கர்நாடக மாநில காவல்துறை முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் அவரது வீட்டில் வைத்தே கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்று(ஏப். 20) அவரது உடலை போல... மேலும் பார்க்க

இறந்த நிலையில் கர்நாடக முன்னாள் டிஜிபி உடல் மீட்பு

கர்நாடக காவல் துறை முன்னாள் தலைமை இயக்குநர் ஓம் பிரகாஷ் மர்மமான முறையில் இறந்துள்ளார். பெங்களூருவில் உள்ள அவரின் இல்லத்தில் உடலை மீட்ட, காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித... மேலும் பார்க்க

குறைந்த விலையில் 5ஜி! வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு!

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி திட்டத்துக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது மும்பையில் மட்டுமே முழ... மேலும் பார்க்க

விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!

பெலகாவியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாளில் செய்த செயல் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி ந... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க