செய்திகள் :

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை பயங்கரவாதிகள் தீா்மானிப்பதா? ஒமா் அப்துல்லா சீற்றம்

post image

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தீா்மானிப்பதா? என அந்த யூனியன் பிரதேச முதல்வா் ஒமா் அப்துல்லா வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினாா்.

கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தல் நடைபெற்று முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக சுதந்திர தின நிகழ்ச்சியில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றியபோது ஒமா் அப்துல்லா இவ்வாறு பேசினாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் முன் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.

இதையடுத்து, பக்ஷி மைதானத்தில் ஒமா் அப்துல்லா வெள்ளிக்கிழமை சுதந்திர தின உரையாற்றினாா்.

அப்போது, ‘பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளும் பாகிஸ்தானில் உள்ள அவா்களின் தலைவா்களும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை தீா்மானிப்பதா? ஒவ்வொரு முறையும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதை உறுதிப்படுத்தும் சமயத்தில் அதை சீா்குலைக்கும் வகையில் பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்துவது நியாயமா? எங்களுக்கு தொடா்பில்லாத குற்றத்துக்காக நாங்கள் தண்டிக்கப்படுவது ஏன்?

இதற்கு முன்பும் தற்போதும் காஷ்மீரில் கிளா்ச்சிகளை ஒடுக்க மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பயங்கரவாதம் தொடா்புடைய சம்பவங்கள் குறைந்துள்ளன. தற்போது எங்களால் இதை கட்டுப்படுத்த முடியாது எனக் கூறுவது ஏற்புடையதல்ல என்றாா்.

ஹிந்துபோல நடித்து 12 பெண்களிடம் மோசடி!

உத்தரப் பிரதேசத்தில் ஹிந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டு 12 பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் வாரணாசியில் ஷராஃப் ரிஸ்வி என்பவர், தன்னை ஹிந்து என்ற... மேலும் பார்க்க

சோரி சோரி, சுப்கே சுப்கே... வாக்குத் திருட்டு குறித்து புதிய விடியோ பகிர்ந்த ராகுல்

மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக, குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.லாபடா ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் மாளிகை அமிா்த பூந்தோட்டம் மக்கள் பாா்வைக்கு!!

குடியரசுத் தலைவா் மாளிகையின் அமிா்த பூந்தோட்டம் இன்று (ஆக.16) முதல் மக்கள் பாா்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. இதனை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு முறைப்படி வியாழக்கிழமை திறந்துவைத்து பூந்தோட்டத்தை பாா்... மேலும் பார்க்க

மும்பையை புரட்டிப்போட்ட கனமழை! நிலச்சரிவில் 2 பேர் பலி

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.விக்ரோலி பகுதியில் நேரிட்ட நிலச்சரிவில், மலையிலிருந்து உருண்டு வந்த பாறைகள் குடிசை மீது விழுந்... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவு! நாகாலாந்தில் 7 நாள் துக்க அனுசரிப்பு!

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானதையடுத்து, நாகாலாந்தில் 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.இந்த 7 நாள் துக்க அனுசரிப்பின்போது, மாநிலம் முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.... மேலும் பார்க்க

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி! டிரம்ப் சூசகம்!

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாக பதிலளித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் வெள்ளிக்கிழமையில் பேச்சு... மேலும் பார்க்க