செய்திகள் :

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?

post image

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370 -ஆவது பிரிவை ரத்து செய்து இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பொதுவாக இதுபோன்ற சந்திப்புகளுக்குப் பிறகு அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்படும். ஆனால், இந்த சந்திப்புகள் குறித்து எவ்வித அறிக்கையும் வெளியிடப்படாமல் இருக்கின்றன.

இதனிடையே, ஜம்மு - காஷ்மீர் பாஜக தலைவர் சத் சர்மா மற்றும் லடாக் துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா ஆகியோர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்புகளின் அடிப்படையில், ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 6 -வது ஆண்டின் நிறைவு நாளில், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் அறிவிப்பு வெளியாகலாம் என இணையத்தில் பரபரப்பாக கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

மேலும், ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் பட்சத்தில், கடந்தாண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, மாநில அந்தஸ்து கொடுக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடைபெற்றால் சந்திக்க தயார் எனத் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, மாநில அந்தஸ்து குறித்து திங்கள்கிழமை இரவு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒமர் அப்துல்லா கூறியிருப்பதாவது:

“ஜம்மு - காஷ்மீரில் நாளை என்ன நடக்கலாம் என்பது பற்றிய சாத்தியமான விஷயங்களை நான் கேள்விப்பட்டேன். நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எதுவும் நடக்காது எனத் தோன்றுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு எதாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆனால், நாளை அல்ல. மத்திய அரசுடன் சந்திப்பையோ, பேச்சுவார்த்தையோ நான் நடத்தவில்லை. வெறும் உள்ளுணர்வு மட்டுமே. நாளை இதே நேரத்தில் சந்திப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, ஜம்மு - காஷ்மீருக்கு இந்த கூட்டத்தொடரிலேயே மாநில அந்தஸ்து வழங்கும் சட்ட வடிவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமருக்கு ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும் கூட்டுக் கடிதம் அனுப்பி இருந்தனர்.

Reports are circulating that an announcement to restore statehood to Jammu and Kashmir will be made today.

இதையும் படிக்க : தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!

மாதத்துக்கு 4 நாள்கள் அசைவம், ரூ.540 தினக்கூலி! பிரஜ்வல் ரேவண்ணாவின் சிறை வாழ்க்கை

பெங்களூரு: கடந்த ஆண்டு, பாலியல் குற்றச்சாட்டில் சிக்குவதற்கு முன்பு, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிரஜ்வல் ரேவண்ணாவின் மாதச் சம்பளம் ரூ.1.2 லட்சம். இனி, சிறையில் ரூ.540க்கு மிகாமல் தினக்கூலி வழங்கப்ப... மேலும் பார்க்க

நீதிமன்றம் கண்டனம்: இது கட்சிகளின் ஜனநாயக உரிமை! - ராகுலுக்கு இந்தியா கூட்டணி ஆதரவு

சீனா ஆக்கிரமிப்பு குறித்த ராகுல் காந்தியின் பேச்சுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது பற்றி இன்று தில்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்திய - சீன எல்லை... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 5வது நாளாக தொடரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை!

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் அகல் தேவ்சர் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் அகல் பகுதியில... மேலும் பார்க்க

குர்மீத் ராம் ரஹீமுக்கு 14 -வது முறையாக பரோல்! 2025 இல் மூன்றாவது முறை!

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு மீண்டும் 40 நாள்கள் பரோல் வழங்கி ஹரியாணா அரசு உத்தரவிட்டுள்ளது.பாலியல் வன்கொடுமை வழக்குகளில்... மேலும் பார்க்க

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தியின் கடமை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இந்திய - சீன எல்லையில் கல்வான் பள்ளத்... மேலும் பார்க்க

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ரூ.17,000 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடுகள் மற்றும் வங்கிக் கடன் மோசடி தொடா்பான விசாரணைக்கு தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி இன்று(ஆக. 5) ஆஜரானார்.அனில் அம்பானி குழும நிறுவனங்கள் ரூ.1... மேலும் பார்க்க