செய்திகள் :

வேலூர்: குண்டும், குழியுமான சாலையில் உருண்டு போராட்டம் நடத்திய கவுன்சிலர் - மேயருடன் வாக்குவாதம்

post image

வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு கவுன்சிலர் லோகநாதன். சுயேட்சையாக வெற்றிப்பெற்ற இவர், தற்போது அ.தி.மு.க ஆதரவுடன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், தன் வார்டுக்குட்பட்ட தொரப்பாடி பகுதிகளில் சாலை, கால்வாய் வசதிகளை செய்து தராமல், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகக் குற்றம்சாட்டி கவுன்சிலர் லோகநாதன் `அங்கபிரதட்சணம்’ செய்வதைப்போல இன்று தண்ணீர் தேங்கிய குண்டும், குழியுமான சாலையில் நீண்ட படுத்து உருண்டபடியே போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்ததும், மேயர் சுஜாதா அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பேசிய மேயர் சுஜாதா, ``சாலைப் போட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் நானும், கமிஷனரும் நேரில் வந்து பார்த்துவிட்டுச் சென்றோம். சாலை போடும் நேரத்தில், எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே பிரச்னை செய்கின்றனர். கடந்த 10 ஆண்டுகாலமாக அ.தி.மு.க இந்தப் பகுதியில் ஒரு சாலைகூட போடவில்லை. பாதாளச் சாக்கடை பணியால் வேலூர் மக்கள் அவதிப்பட்டார்கள். இப்போது பாதாள சாக்கடைப் பணிகள் முடிக்கப்பட்டு, மாநகராட்சியில் 80 சதவிகித சாலைகள் போடப்பட்டிருக்கிறது. வரும் வெள்ளிக்கிழமை இங்கேயும் சாலை அமைக்கப்படும்’’ என்றார்.

மேயர் சுஜாதா

அப்போது, கூடியிருந்தவர்கள் ``இவ்வளவு நாள்களாக எங்கே போயிருந்தீர்கள்? வரும் வெள்ளிக்கிழமை திருவிழா நடக்கிறது. பால்குடம் எப்படி எடுத்துக்கொண்டு வர முடியும்’’ என்று கூறி கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால், மேயர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மேயருடன் வந்திருந்த ஒப்பந்ததாரர், ``அடுத்த வாரத்தில் சாலைப் போட்டுத் தருகிறோம்’’ என்றபோது, ``மேயர் இந்த வெள்ளிக்கிழமை என்கிறார். நீங்கள் அடுத்த வாரம் என்கிறீர். நாங்கள் எதை நம்புவது’’ எனக் கேள்வியெழுப்பினர்.

அதற்கு அந்த ஒப்பந்ததாரர் ``இந்த வாரத்தில் ரெடிமிக்ஸ் கொட்டுகிறோம். மழைப் பெய்வதால், உடனடியாக வேலையை ஆரம்பிக்க முடியாது. அடுத்த வாரத்தில் தார் ரோடு போடுகிறோம்’’ என்றார். இதைக் கேட்டு கொதித்துப்போன மக்கள், ``நீங்கள் கட்டிக்கொடுத்த பாத்ரூம் ஏற்கெனவே நாறிக்கொண்டு இருக்கிறது. சாலைப் பிரச்னைக்கும் பலமுறை மனு கொடுத்துவிட்டோம். மாநகராட்சியில் எங்களை மதிப்பதே இல்லை’’ என்றுக்கூறி தொடர்ந்து மல்லுக்கட்டியதால் பரபரப்பான சூழல் நிலவியது. காவல்துறையினர் சென்று சமரசப்படுத்தியதால், கூட்டம் கலைந்தது.

ஜெய்பூரில் நின்ற உக்ரைன் அதிபர் மனைவியின் விமானம் - காரணம் தெரியுமா?

உக்ரைன் நாட்டின் உயர் மட்ட தூதுக்குழு சென்ற விமானம் கடந்த ஞாயிறு அன்று (ஆகஸ்ட் 3) ஜெய்பூர் சர்வதேச விமான நிலையத்தில் நின்றிருக்கிறது. அந்த விமானத்தில் உக்ரைனின் முதல் பெண்மணியும் ஜனாதிபதி விளோதிமிர் ஜ... மேலும் பார்க்க

'கொரோனா நேரத்துலகூட கக்கூஸை கழுவினோமே' - போராடும் துப்புரவு தொழிலாளர்களின் கண்ணீர் - Spot Visit

துப்புரவு பணியாளர்கள் போராட்டம்சென்னை ரிப்பன் மாளிகை பகுதி எப்போதுமே பரபரப்பாக போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதியாகத்தான் இருக்கும். அந்தப் பகுதி இப்போது இன்னும் பரபரப்பாக நெரிசலாக மாறியிருக்கிறது. காரண... மேலும் பார்க்க

புல்வாமா தாக்குதலில் மோடி அரசைக் குற்றம்சாட்டிய J&K Ex ஆளுநர் மறைவு; யார் இந்த சத்யபால் மாலிக்?

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா தாக்குதலின்போதும், மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு நீக்கியபோதும் அங்கு ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் (79) இன்று காலமானார்.கிட்னி தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு டெல... மேலும் பார்க்க

"முத்துவேலர் பணத்தில் திட்டம் கொண்டுவந்தால் இன்பநிதி பெயரைக் கூட வையுங்கள்" - ஜெயக்குமார் காட்டம்!

தமிழக அரசின் திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பெயரை வைப்பதற்கு எதிராக முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு தொடுத்துள்ளார். திமுக தரப்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய திட்டத்துக்க... மேலும் பார்க்க

புதுச்சேரி: `செவிலியர் பணிகளை கொல்லைப்புறமாக நியமிக்க ஜிப்மர் திட்டமிடுகிறது’ - எச்சரிக்கும் திமுக

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க அமைப்பாளருமான சிவா, ``ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஜிப்மர் நிர்வாகம், தற்போதைய... மேலும் பார்க்க

'திரைப்புகழ் இருப்பதால் அவருக்கான வெளிச்சம் அதிகமாக இருக்கிறது, ஆனா.!'- விஜய்யை சாடிய சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று( ஆகஸ்ட் 5) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அதில் தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடிப் பேசியிருக்கிறார். "திரைப்புகழ் இருப்பதால் அவருக்கான வ... மேலும் பார்க்க