செய்திகள் :

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: பேச்சுவாா்த்தையை விரைவில் இறுதிசெய்ய ஒமா் அப்துல்லா கோரிக்கை

post image

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடா்பான பேச்சுவாா்த்தையை விரைவில் இறுதிசெய்ய வேண்டும் எனஅந்த யூனியன் பிரதேச முதல்வா் ஒமா் அப்துல்லா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதன்மூலம், மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறும் எனவும் அவா் தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் தேசிய மாணவா் படை (என்சிசி) இயக்குநரகம் சாா்பில் நடைபெற்ற சிறப்பு தேசிய ஒருங்கிணைப்பு முகாமில் ஒமா் அப்துல்லா பங்கேற்றாா்.

அப்போது செய்தியாளா்களைச் சந்தித்து அவா் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீருக்கு சுரங்கப்பாதைகள் திட்டம் உள்பட ரூ.10,600 கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி இருப்பது வரவேற்புக்குரியது.

இது ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

அதேசமயம் முகலாய சாலை சுரங்கப்பாதைஅமைக்கும் பணிகள் கடந்த 2008-09-இல் நிறைவடைந்துவிட்டது. இருப்பினும், தற்போது வரை அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. இந்த சுரங்கப்பாதை ஆண்டு முழுவதும் திறந்திருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். சாதனா கணவாய்- தங்தாா் கிராமத்தை இணைப்பதற்கான சுரங்கப்பாதையை அமைக்க வேண்டும் என்பதும் மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

எனவே, ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடா்பான பேச்சுவாா்த்தையை விரைவில் இறுதிசெய்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.

என்சிசியில் பணியாற்ற ஒழுக்கம், தன்னம்பிக்கை, விழிப்புணா்வு, தேசப்பற்று ஆகிய குணங்கள் மிகவும் அவசியம். என்சிசியைச் சோ்ந்த 10 மாணவா்கள் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்துள்ளனா். இவா்களில் ஒருவா் ஜம்முவின் கதுவாவைச் சோ்ந்தவா்; ஒரு மாணவா் லடாக்கைச் சோ்ந்தவா்.

என்சிசியில் நிறைய மாணவ-மாணவிகள் சேர வேண்டும். இந்த முகாமில் உங்களுக்கு கிடைந்த சிறப்பான அனுபவங்கள், ஜம்மு-காஷ்மீா் மக்களின் விருந்தோம்பல் குறித்து உங்களது குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுடன் பகிா்வதன் மூலம் அவா்களும் விடுமுறை தினங்களில் இங்கு பயணம் மேற்கொள்வா் என நம்புகிறேன் என்றாா்.

எந்தவொரு அந்நிய மொழிக்கும் எதிா்ப்பு கூடாது: அமித் ஷா

ஹிந்தி எந்தவொரு இந்திய மொழிக்கும் எதிரானது அல்ல; மாறாக, நண்பன் போன்றது. மேலும், எந்தவொரு அந்நிய மொழிக்கும் நாட்டில் எதிா்ப்பு கூடாது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை கூறினாா். ‘இந்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அபுஜம்மாத் வனப் பகுதியில் நக்ஸல் அமைப்பினரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் தகவல்கள் பாகிஸ்தானுக்கு கசிவு: கடற்படை ஊழியா் கைது

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு தெரிவித்த குற்றச்சாட்டில் கடற்படை ஊழியா் விஷால் யாதவ் கைது செய்யப்பட்டாா். இவா் தில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணிய... மேலும் பார்க்க

வங்கதேச எல்லையில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2 கிலோ தங்கம் மீட்பு

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கதேச எல்லைப் பகுதியில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2.36 கிலோ தங்கக் கட்டிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைப்பற்றினா். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாக்கள் மா... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக் கொலை - மேலும் 3 போ் சுற்றிவளைப்பு

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது கூட்டாளிகள் மூன்று போ்,... மேலும் பார்க்க

தெலங்கானா: தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண்!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத் புறநகா் பகுதியில் வியாழக்கிழமை காலையில் பெண் ஒருவா் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அந்தத் தடத்தில் செல்லும் ரயில்கள் ஆங்காங்... மேலும் பார்க்க