செய்திகள் :

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

post image

ஜம்மு ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் கடிதத்துடன் வந்த புறாவை பாதுகாப்புப் படையினர் பிடித்துள்ளனர்.

ஜம்மு-காமீரின் சர்வதேச எல்லையில் உள்ள காட்மரியா பகுதியில் ஆகஸ்ட் 18 அன்று இரவு 9 மணியளவில் பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்ததாக நம்பப்படும் புறா பிடிபட்டது. அந்த புறாவின் காலில் துண்டுச் சீட்டு ஒன்று கட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், "காஷ்மீர் சுதந்திரம்", "நேரம் வந்துவிட்டது" ஆகிய அடங்கிய வாசகங்களுடன் ஜம்மு ரயில் நிலையத்தை வெடிக்கச் செய்யும்படி உருது மற்றும் ஆங்கிலத்தில் மிரட்டல் செய்தியும் இடம்பெற்றிருந்தது.

இது ஒரு குறும்புச் செயலா அல்லது நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டமா என்று பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த மிரட்டலைத் தொடர்ந்து ரயில் நிலையம் மற்றும் தண்டவாளங்களைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. நாய் படைகள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் உள்ளூர் போலீஸாரும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!

பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், புறா சிறப்பு பயிற்சி பெற்று எல்லைக்கு அப்பால் இருந்து அச்சுறுத்தல் செய்தியுடன் விடுவிக்கப்பட்டிருக்கலாம். இதுபோன்ற விஷயங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். பாகிஸ்தான் ஏற்கெனவே இதுபோன்று இந்திய எல்லையில் பல்வேறு தகவல்களுடன் பலூன்கள், கொடிகள் மற்றும் புறாக்களை அனுப்பியுள்ளது.

ஆனால் அச்சுறுத்தல் கடிதத்துடன் புறா ஒன்று பிடிபட்டது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் மேலும் கூறினர்.

Security forces have captured a pigeon carrying a threat note to blow up the Jammu railway station in the border area of RS Pura in Jammu district, prompting police to beef up security in the region, officials said.

மும்பை: சொகுசு ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பையில் சொகுசு ஹோட்டலுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மகாராஷ்டிர மாநிலம், வோர்லியில் உள்ள சொகுசு ஹோட்டலுக்கு ஆங்கிலத்தில் மிரட்டல் விடுத்து மின்னஞ... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

உத்தரகண்டில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவனால் பரபரப்பு நிலவியது. உத்தரகண்ட் மாநிலம், உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கங்கன்தீப் சிங் கோலி இயற்பியல் ஆசிரியரா... மேலும் பார்க்க

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.... மேலும் பார்க்க

தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!

தெலங்கானாவில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 மூத்த தலைவர்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தெலங்கானாவில், இயங்கி வந்த தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் தண்... மேலும் பார்க்க

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஸ்ரேயாஸ் ஐயரின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட முக்கிய வ... மேலும் பார்க்க

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை: நிதிஷ்குமார்

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பிகார் மாநில மதரஸா கல்வி வாரியத்தின் நூற்றாண்டு வி... மேலும் பார்க்க