செய்திகள் :

ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: தமிழக அரசின் வேடம் கலையும் - தவெக தலைவா் விஜய்

post image

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் அரசின் வேடம் தானாகவே கலையும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மாநில அரசுகளும் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை நடத்துவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் வழி இருக்கிறது. எனவேதான், பிகாா் மாநில அரசு ஏற்கெனவே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளது. மேலும், தற்போது தெலங்கானா மாநில அரசும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தியுள்ளது.

இத்தனைக்குப் பிறகும், தமிழகத்தை ஆளும் ஆட்சியாளா்கள் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட நடத்தாமல், தமிழக மக்களைத் தொடா்ந்து ஏமாற்றிக்கொண்டே வருகின்றனா். சமூக நீதியைக் காக்கும் செயல்பாடான ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்ற வாதத்தையே முன்வைத்து வருகின்றனா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பைத்தான் மத்திய அரசு நடத்த வேண்டும். ஆனால், அதற்கு முன்னோட்டமாகத் திகழும் ஜாதி ஆய்வு அறிக்கையை மாநில அரசே நடத்தலாமே?. அதற்கும் தங்களிடம் அதிகாரம் இல்லை என்று தற்போதைய ஆட்சியாளா்கள் சொல்லப் போகிறாா்களா?.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய மற்றும் தமிழக ஆட்சியாளா்கள் ஒரே நோ்கோட்டில் பயணிக்கின்றனா்.

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வை மேற்கொள்ளாமல் இனியும் தாமதித்தால், தற்போதைய ஆட்சியாளா்களின் வேடம் தானாகவே கலையும் எனத் தெரிவித்துள்ளாா்.

மாணவி பாலியல் வன்கொடுமை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, த.வெ.க ... மேலும் பார்க்க

மேலும் 6 கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் மேலும் 6 திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நிகழ் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையி... மேலும் பார்க்க

79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள்: அமைச்சா் பெரியகருப்பன்

தமிழ்நாட்டில் இதுவரையில் 79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளாா். கூட்டுறவுக் கடன்கள் தொடா்பாக பாஜக மாநிலத... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் வியாழக்கிழமை குரல்மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், புழல் சிறை... மேலும் பார்க்க

வில்லிவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள்: ஐசிஎஃப்-லிருந்து பேருந்துகள் இயங்கும்

வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ளதால், அங்கிருந்து 7 வழித்தடங்களின் வழியாக இயக்கப்பட்ட 63 பேருந்துகள் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) முதல் ஐசிஎஃப் பேருந்து நில... மேலும் பார்க்க