செய்திகள் :

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை!

post image

ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு சிங்பம் மாவட்டத்தில், துகுனியா, பொசைடா மற்றும் தும்பகரா ஆகிய பகுதிகளில் இன்று (ஆக.13) காலை 6 மணி அளவில் பாதுகாப்புப் படையினர், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதிகளில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியதுடன் இருதரப்புக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை துவங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதலில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும், அவரிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சுதந்திர நாளை முன்னிட்டு, கொல்ஹான் பகுதியில் மிகப் பெரியளவிலான தாக்குதலை நடத்த மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஒன்றுக்கூடியுள்ளதாக, மேற்கு சிங்பம் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல் கிண்டல்!

A Maoist militant has been killed in a gunfight with security forces in Jharkhand.

உத்தரகண்டில் சாலையின் நடுவில் நிலச்சரிவு! 2 பேர் மாயம்... 2 பேர் படுகாயம்!

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் - நீல்காந்த் சாலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் மாயமாகியுள்ளனர்.உத்தரகண்டில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில், பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் மன்பூர்-மொஹ்லா-அம்பாகார் சௌக்கி மாவட்டத்தின் மதன்வா... மேலும் பார்க்க

நடப்பு நிதியாண்டில் 10,660 கி.மீ. நெடுஞ்சாலை: அமைச்சர்

நடப்பு நிதியாண்டில் மட்டும் 10,660 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா தெரிவித்துள்ளார். 2025–26 நிதியாண்டில் 10 ஆயிரம் கி.ம... மேலும் பார்க்க

ஆக.21 மாஸ்கோவில்.. ரஷியா - இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வரும் ஆக.21 ஆம் தேதியன்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து உரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும்... மேலும் பார்க்க

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல் கிண்டல்!

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்தமைக்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற... மேலும் பார்க்க

பாகிஸ்தான் எஃப்-16 போர் விமானம் வீழ்த்தப்பட்டதா? பதிலளிக்க மறுத்த அமெரிக்கா!

ஆபரேஷன் சிந்தூர் போரின்போது பாகிஸ்தானின் எஃப் - 16 ரக போர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா? என்ற கேள்விக்கு அமெரிக்கா பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கான பதிலை பாகிஸ்தான் ராணுவத்திடம்தான் பெற வேண... மேலும் பார்க்க